நினைத்தேன் வந்தாய் சீரியலில் எழிலுக்கு கிடைத்த விருது… குழந்தைகள் போடும் பிளான்!
Ninaithen Vandhai serial update: எழிலுக்கு கிடைத்த விருது, அப்பாவுக்கு தெரியாமல் பிளான் போடும் குழந்தைகள், இந்து செய்ய போவது என்ன என தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நினைத்தேன் வந்தாய் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.
நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் சமைத்த பிரியாணியை சாப்பிட்ட கவின் சூப்பராக இருக்கு என்று சொன்னதும் மற்ற குழந்தைகளும் வந்து சாப்பிடுகின்றனர். அபி பிரியாணியை சாப்பிட்டு பார்த்து அப்படியே அம்மா சமைத்த மாதிரியே இருக்கு என்று சொல்ல மற்றவர்களும் சாப்பிட்டு பார்த்து ஆமாம் அப்படி தான் இருக்கு என்று சொல்கின்றனர். அடுத்து கனகவல்லி வர அவளையும் டேஸ்ட் செய்து பார்க்க சொல்ல பிரியாணியை சுவைத்த கனகவல்லி அப்படியே இந்து சமைத்த மாதிரியே இருக்கு, நீ எப்படி சமைப்பனு எனக்கு தெரியும். அப்படி இருக்கும் போது இது எப்படி இந்து சமைத்த மாதிரி வந்தது? யார் சமைத்தது என்று கேட்க சுடர் நான் தான் சமைத்தேன் என்று சொல்கிறாள்
எழிலும் ஹாஸ்பிடல் கிளம்பி வர மனோகரி இன்னைக்கு உனக்கு சிறந்த டாக்டர் விருது தரப்போறாங்க, அதுக்கு நீ கண்டிப்பா வரணும் என்று சொல்லி கூப்பிட கனகவல்லி பிள்ளைகளையும் கூட்டி செல்ல சொல்கிறாள். இந்நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, எழில் பசங்க அங்க வேண்டாம் என்று சொல்ல கனகவல்லி இல்ல கூட்டிட்டு போங்க அப்போ தான் அவங்களுக்கும் உங்களை பத்தி தெரியும் என்று சொல்லி அனுப்பி வைக்கிறாள். இவர்கள் எல்லாரும் பங்ஷனுக்கு கிளம்பி வருகின்றனர். இந்துவும் புருஷன் விருது வாங்குவதை பார்ப்பதற்காக இந்த பங்ஷனுக்கு வருகிறாள்.
அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் செழியன் பேசி முடித்து எழிலுக்கு விருது கொடுக்க இந்துமதி அதை பார்த்து சந்தோசப்படுகிறாள், குழந்தைகள் பங்க்ஷனில் வேண்டா வெறுப்பாக உட்கார்ந்திருக்க திடீரென சாக்லேட் வைத்திருப்பதை பார்க்கின்றனர், அப்பாவுக்கு தெரியாமல் போய் சாக்லேட் சாப்பிடணும் என்று பிளான் போடுகின்றனர்.
Also read… மோடியாக நடிக்க ரெடி… ஆனால், சத்யராஜ் போட்ட கண்டிஷன்!
இதை கவனித்த இந்து பசங்க சாக்லேட் சாப்பிடுறதை எழில் பார்த்தா அவ்வளவு தான், அவருக்கு சாக்லேட் சாப்பிடுறது பிடிக்காதே என்று பிள்ளைகளை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ன செய்வது என்று யோசிக்கிறாள். இந்த நேரத்தில் பிள்ளைகளும் எழிலுக்கு தெரியாமல் சாக்லேட் எடுப்பதற்காக வந்து விடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.