5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Delhi Crime News: இன்ஸ்டா பிரபலம் கொலை.. கர்ப்பமாக இருந்த கொடூரம்.. காதலன் கொடுத்த பகீர் வாக்குமூலம்!

Delhi Influcer Murder: டெல்லியில் பெண் இஸ்டாகிராம் பிரபலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்ய வற்புறுத்தியதால் 7 மாத கர்ப்பமாக இருந்த பெண்ணை அவரது காதலன் கொடூரமாக கொலை செய்து உடலை புதைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Delhi Crime News: இன்ஸ்டா பிரபலம் கொலை.. கர்ப்பமாக இருந்த கொடூரம்.. காதலன் கொடுத்த பகீர் வாக்குமூலம்!
கொல்லப்பட்ட பெண்
umabarkavi-k
Umabarkavi K | Published: 26 Oct 2024 21:20 PM

டெல்லியில் பெண் இஸ்டாகிராம் பிரபலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்ய வற்புறுத்தியதால் 7 மாத கர்ப்பமாக இருந்த பெண்ணை அவரது காதலன் கொடூரமாக கொலை செய்து உடலை புதைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேற்கு டெலியின் நங்லோய் பகுதியைச் சேர்ந்தவர் சோனியா. இவருக்கு வயது 19. இவர் இஸ்டாகிராமில் மிகவும் பிரபலமாக இருந்தார். இதனால் அவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்கிறார்கள்.

கர்ப்பிணி  கொடூர கொலை:

இவர் சஞ்சு என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், அக்டோபர் 22ஆம் தேதி சோனியாவின் சகோதரர் மணீஷ், அவரைக் காணவில்லை என்று புகார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அவர் காணாமல் போனதில் சஞ்சுவுக்கு தொடர்பு இருப்பதாக மணீஷ் சந்தேகித்தார். இது தொடர்பாக போலீசாரிடமும் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரண நடத்தி வந்தனர். அதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது, பெண் சோனியா 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். எனவே, தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என காதலன் சஞ்சுவை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் சஞ்சு திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது.

Also Read: கால்சியம், வைட்டமின் டி3 உள்ளிட்ட 49 மாத்திரைகள் தர சோதனையில் தோல்வி.. 4 மருந்துகள் போலி என அறிவிப்பு..

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலன் வெறிச்செயல்

மேலும், கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என சஞ்சு கூறி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. ஆனால், கருகலை மறுத்த சோனியா, தன்னை திருமணம் செய்ய வேண்டும் என வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சஞ்சு, சோனியாவை கொலை செய்ய முடிவு செய்தார்.

இதனால், சோனியாவை ஹரியானாவில் உள்ள ரோஹ்தக் நகருக்கு வருமாறு அழைத்துள்ளார். அதை நம்பிய சோனி, அங்கு சென்றார். அப்போது, சஞ்சு அவரது நண்பர்கள் இருவரை அங்கு வரவழைத்தார். இந்த நிலையில், சஞ்சுவுக்கும், சோனிக்கும் இடையே திருமணம் செய்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது திட்டமிட்டபடி, சோனியை நண்பர்கள் உதவியடன் சஞ்சு அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், சோனி உடலை அந்த பகுதியில் புதைத்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.  சோனி கர்ப்பமாக இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சிக்கிய 3 பேர்:

இதனை அடுத்து போலீசார் சஞ்சுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது நண்பர் பங்கஜ் என்பவரையும் கைது செய்துள்ளனர். மேலும் மூன்றாவது குற்றவாளியான ரித்திக்கை போலீசார் தேடி வருகின்றனர்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள்  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடக்கும் கொலை சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், குற்றச்செயல்களை அதிகரித்த வண்ணமே உள்ளது.

Also Read: இந்தியா – சீனா எல்லை விவகாரம்.. டெப்சாங்கை தொடர்ந்து யாங்சேயிலும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும்..

குறிப்பாக, பாதிக்கப்படும் பெண்களுக்கு தெரிந்த நபர்களே தான் வன்முறை சம்பங்களில் ஈடுபடுவதாக ஐ.நா. தெரிவித்திருந்தது. இதனால், கொலை, கொள்ளை, வன்முறை சம்பவங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

Latest News