Telangana: எமனாக அமைந்த பள்ளம்.. தெலங்கானா கார் விபத்தில் 7 பேர் பலி - Tamil News | 7 people died in a road accident in Telangana Medak district | TV9 Tamil

Telangana: எமனாக அமைந்த பள்ளம்.. தெலங்கானா கார் விபத்தில் 7 பேர் பலி

கார் விபத்தில் துரதிஷ்டவசமாக காரில் பயணம் செய்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் உடனடியாக காரில் இருந்தவர்களை மீட்க முயன்றனர். சம்பவம் தொடர்பாக மேடக் மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேடக் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.  

Telangana: எமனாக அமைந்த பள்ளம்.. தெலங்கானா கார் விபத்தில் 7 பேர் பலி

கார் விபத்து

Updated On: 

16 Oct 2024 22:36 PM

தெலங்கானவின்  நடைபெற்ற சாலை விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள மேடக் மாவட்டத்தில் உள்ள சிவம்பேட்டையில் இன்று மாலையில் இந்த பயங்கர சாலை விபத்தானது நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் நான்கு பெண்களும் இரண்டு சிறுமிகளும் அடங்குவர். உசிரிகப்பள்ளி என்ற இடத்தில் வேகமாக வந்த ஒரு காரின் டிரைவர் சாலையில் பள்ளம் இருந்ததைப் பார்த்து பிரேக் போட முயன்றுள்ளார். ஆனால் கார் அவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள பள்ளத்தில் வேகமாக இறங்கி ஏறி சாலையோரம் இருந்த மரத்தில் மோதி அருகில் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது.

Also Read: Viral Video : சிறுநீர் பயன்படுத்தி சமைத்த பணிப்பெண்.. வாந்தி மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குடும்பத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்!

இந்த விபத்தில் துரதிஷ்டவசமாக காரில் பயணம் செய்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் உடனடியாக காரில் இருந்தவர்களை மீட்க முயன்றனர். சம்பவம் தொடர்பாக மேடக் மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேடக் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Also Read: Metro Trains: நோட் பண்ணுங்க.. பயணிகளுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!

படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஓட்டுநருக்கு மருத்துவமனையில் தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கார் விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் பமுபண்டா தாண்டா, ரத்னாபூர் மற்றும் தல்லப்பள்ளி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியதால் உயிரிழந்தவர்கள் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக உசிரிக்கப்பள்ளி முதல் வேல்துருத்தி வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அரசு இனியும் உயிரிழப்புகள் ஏற்படா வண்ணம் தடுக்கும் பொருட்டு சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்தில் இறந்த நாளிதழ் உரிமையாளர்

இதனிடையே மதுரை கே கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் தின பூமி நாளிதழ் உரிமையாளராக இருந்து வருகிறார். மணிமாறன் தனது மகன் ரமேஷ் உடன் நேற்று முன்தினம் மாலை திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு காரில் சென்றுள்ளார். காரை ரமேஷ் ஓட்டிய நிலையில் கோவில்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் 4 ஆட்டின் புதூர் மேம்பாலத்தை கடந்து சென்று போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. மதிய வேகத்தில் எதிர்கோலம் உள்ள சாலையில் பாய்ந்த கார் அந்த வழியாக வந்த லோடு வாகனத்தின் மீது மோதியது.

Also ReadTamilnadu Powercut: தமிழ்நாட்டில் நாளை எங்கெல்லாம் மின்தடை? – முழு விபரம் இதோ!

இதில் சம்பவ இடத்திலேயே மணிமாறன் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். காயமடைந்த ரமேஷை நாலாட்டின்புதூர் போலீசார் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதே சமயம் லேசான காயம் அடைந்த லோடு வாகன ஓட்டுநர் பேரையூர் தாலுகாவை சேர்ந்த அசோக்குமார் என்பவருக்கும் கோவில்பட்டி அரசு மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனுடைய மணிமாறன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருந்த சாலை விபத்தில் 5 இந்தியர்கள் உயிரிழந்தனர். கடந்த அக்டோபர் 13ஆம் தேதி டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ரவுண்டால்ஃப் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் உட்பட இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடன் காரில் பயணித்த மற்றொரு பயணி படுகாயம் அடைந்துள்ளார் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா?
ஆப்பிள் ஐபோன் 13-க்கு ரூ.7,000 தள்ளுபடி வழங்கும் அமேசான்!
பெருஞ்சீரகம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?