Harassment : ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. அதிர்ச்சி சம்பவம்! - Tamil News | 9 year old girl abused and left with injuries while grazing goats in Madhya Pradesh | TV9 Tamil

Harassment : ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. அதிர்ச்சி சம்பவம்!

Published: 

25 Sep 2024 14:26 PM

Madhya Pradesh | மத்திய பிரதேச மாநிலம், மொரினா மாவட்டத்தில் உள்ள அம்பா டெஹ்சில் என்ற பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி, தனது கிராமத்தில் ஆடுகளை மேய்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபர் அங்கு தனது கால்நடைகளை மேய்துக் கொண்டிருந்துள்ளார்.

Harassment : ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. அதிர்ச்சி சம்பவம்!

மாதிரி புகைப்படம்

Follow Us On

மத்திய பிரதேசத்தில் ஆடு மேய்க்க சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்த தகவல் வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய பிரதேசத்தின் சட்ட ஒழுங்கு குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நிலையில் சிறுமிக்கு நடந்தது என்ன, இந்த விவகாரம் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : School Leave: அப்படி போடு.. மாணவர்களுக்கு குஷியான நியூஸ்.. காலாண்டு விடுமுறை நீடிப்பு.. வெளியான அறிவிப்பு..

9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

மத்திய பிரதேச மாநிலம், மொரினா மாவட்டத்தில் உள்ள அம்பா டெஹ்சில் என்ற பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி, தனது கிராமத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபர் அங்கு தனது கால்நடைகளை மேய்துக் கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் சிறுமி தனியாக இருப்பதை உணர்ந்த அந்த நபர், அவரை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்பு யாரும் இல்லாத இடத்தில் காயங்களுடன் சிறுமியை விட்டுச் சென்றுள்ளார். சம்பவ இடத்தில் இருந்து தப்பித்த சிறுமி வீட்டிற்கு சென்று தனக்கு நடந்த அந்த கோர சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க : TVK Meeting: தள்ளிப்போகிறதா விஜய்யின் த.வெ.க மாநாடு.. மீண்டும் ஒரு புதிய சிக்கல்..

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமி

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், குற்றவாளியை கைது செய்தனர். இது குறித்து பேசிய மொரினா மாவட்ட எஸ்.பி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி காயமடைந்திருப்பதால் அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : J&K Election: ஜம்மு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு.. வெற்றிக்கனி யாருக்கு?

காங்கிரஸ் கடும் கண்டனம்

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், மத்திய பிரதேச காங்கிரஸ் மாநில தலைவர் ஜித்து பட்வாரி, அம்மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 9 வயது சிறுமிக்கு இத்தகைய அநியாயம் நடந்திருப்பது ஒட்டுமொத்த மாநிலத்திற்கே அவமானம். ஒவ்வொரு நாளும் மத்திய பிரதேசத்தில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மனதை ஆழமாக பாதிக்கின்றன. மத்திய பிரதேசத்தில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சீரழந்து வருகிறது என்று  அவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : குஜராத்தில் லாரி மீது கார் மோதி கோர விபத்து.. 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சோகம்..

அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் தான் தற்போது நிலவி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கொல்கத்தாவின் பயிற்சி பெண் மருத்துவர் மருத்துவமனையிலே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மருத்துவரின் கொலையை அடுத்து வெளியான உடற்கூறாய்வு முடிவுகள் நாட்டையே நடுநடுங்க செய்தது. காரணம், அவ்வளவு கொடூரமாக அந்த மருத்துவர் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் வெடித்த நிலையில் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினர். மருத்துவருக்கு உடனடி நீதி கிடைக்க வேண்டும் என்று இன்றும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மருத்துவர் மட்டுமன்றி பணி முடிந்து வீடு திரும்பிய செவிலியர், பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவி என கடந்த சில மாதங்களில் பல்வேறு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அரங்கேறியுள்ளன. தற்போது ஆடு மேய்க்க சென்ற 9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்..!
சருமத்திற்கு பல நன்மைகளை தரும் கற்றாழை..!
புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
Exit mobile version