5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Watch Video: படத்தை மிஞ்சும் காட்சிகள்.. ட்ரெண்டிங்காக அந்தரத்தில் தொங்கிய பெண்..!

Viral Video: புனேவில் பெண் ஒருவர் பழமையான கட்டடத்தின் மீது ஏறி தனது ஆண் நண்பரின் கையை பிடித்த வண்ணம் தொங்கியுள்ளார். இதனை மூன்றாவது நபர் ஒருவர் படம்பிடித்துள்ளார். இதனை சமூக வலைத்தள பக்கமாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளனர், தற்போது இந்த பதிவு எக்ஸ் தளத்திலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் சுமார் 100 அடிக்கு மேல் தொங்கிய பெண்ணை கண்டித்து பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த மூன்று பேரையும் கண்டுபிடித்து, அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Watch Video: படத்தை மிஞ்சும் காட்சிகள்.. ட்ரெண்டிங்காக அந்தரத்தில் தொங்கிய பெண்..!
அந்தரத்தில் தொங்கிய பெண்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 20 Jun 2024 20:23 PM

புனே: சினிமா பாணியில் ஆபத்தான முறையில் படம்பிடித்த இளைஞர்களின் பதிவு சமூக வலைத்தளத்தில் பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. புனேவில் பெண் ஒருவர் பழமையான கட்டடத்தின் மீது ஏறி தனது ஆண் நண்பரின் கையை பிடித்த வண்ணம் தொங்கியுள்ளார். இதனை மூன்றாவது நபர் ஒருவர் படம்பிடித்துள்ளார். இதனை சமூக வலைத்தள பக்கமாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளனர், தற்போது இந்த பதிவு எக்ஸ் தளத்திலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் சுமார் 100 அடிக்கு மேல் தொங்கிய பெண்ணை கண்டித்து பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த மூன்று பேரையும் கண்டுபிடித்து, அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: ஈஸியா வருமான வரி கட்டலாம்.. இந்த 4 விஷயத்தை மனசில வச்சிக்கோங்க!

நாளுக்கு நாள் சமூக வலைத்தளத்தின் பயன்பாட்டு மக்களிடம் அதிகரித்து வருகிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதில் மூழ்கி உள்ளனர். குறிப்பாக ட்ரெண்டிங் என்ற பெயரில் மக்கள் தினசரி ஏதேனும் ஒரு புது விஷயத்தை பதிவு செய்து வருகின்றனர். சமூக வலைத்தளம் முலம் பயனுள்ள விஷயங்கள் மக்கள் தெரிந்துக்கொண்டாலும், தேவையற்ற விஷயங்களும் இடம்பெற்று வருகிறது.

அந்த வகையில், பூனேவில் சுவாமி நாராயண கோயில் அருகே இரண்டு பேர் ஒரு பழமையான கட்டடத்தில் ஏறியுள்ளனர். அமேசிங் ஸ்பைடர் மேன் பட பாணியில், அந்த பெண் ஆண் நண்பரின் கையை மட்டும் பிடித்து கட்டடத்தில் இருந்து தொங்கியுள்ளார். இதனை மூன்றாவதாக இருந்த நபர் படம் பிடித்துள்ளார். பின்னர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது. இந்த பதிவு பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், ஆண் நண்பரின் கையை மட்டுமே பிடித்து 100 அடி உயரத்தில் தொங்கிய பெண்ணிற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகிறது. மேலும் இந்த இரண்டு நபர்களையும் கண்டுபிடித்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி.. அதிர்ச்சியில் ரயில் பயணிகள்..!

Latest News