5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Aadhar Card Update: செம்ம சான்ஸ்.. ஆதார் கார்ட்டை அப்டேட் செய்ய கூடுதல் அவகாசம்.. சீக்கிரம் வேலைய முடிங்க!

ஆதார் அட்டை: ஆதார் அட்டையை புதுப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை புதுப்பிக்க வரும் செப்டம்பர் 14ஆம் தேதி கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆதார் அட்டை புதுப்பிப்பதற்கு கால அவகாசத்தை நீட்டித்து ஆதார் கார்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Aadhar Card Update: செம்ம சான்ஸ்.. ஆதார் கார்ட்டை அப்டேட் செய்ய கூடுதல் அவகாசம்.. சீக்கிரம் வேலைய முடிங்க!
ஆதார் அட்டை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 12 Sep 2024 14:50 PM

ஆதார் அட்டை: ஆதார் அட்டையை புதுப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை புதுப்பிக்க வரும் செப்டம்பர் 14ஆம் தேதி கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆதார் அட்டை புதுப்பிப்பதற்கு கால அவகாசத்தை நீட்டித்து ஆதார் கார்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வரும் டிசம்பர் 14ஆம் தேதி வரை ஆதார் அட்டை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கும் ஆதார் அட்டை தற்போது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு இன்றியமையாததாக மாறியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்டங்களும் ஆதார் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் சேறுவது, மருத்துவம், பயணம், அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது என அனைத்திற்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை இல்லாமல் பல காரியங்களை செய்யவே முடியாத நிலை உள்ளது. தனிநபரின் கருவிழி மற்றும் கைரேகைகள் சேகரிக்கப்பட்டு அதன் விவரங்களுடன் வழங்கப்படும் ஆதார் அட்டையை அரசு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதால் மோசடிகள் தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்தகைய முக்கிய ஆவணமாக இருக்கும் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் அமைப்பு கூறியிருக்கிறது.

Also Read: வட்டி மட்டுமே ரூ.20,500.. அசத்தலான அஞ்சலக சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!

ஆதாரை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு:

பொதுவாக ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம், பயோமெட்ரிக் தகவல்கள் புதுப்பிப்பதற்கு ஆதார் மையத்தில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இதனை செய்ய ஆதார் அமைப்பு இலவசமாகவும் வழங்குகிறது. இதன் மூலம் ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, மொபைல் எண், பிறந்த தேதி, பாலினம், இமெயில் போன்ற விவரங்களை எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் இலவசமாக ஆன்லைனில் அப்டேட் செய்து கொள்ளலாம்.

இந்நிலையில், ஆதார் கார்டை இலவசமாக புதுப்பித்துக்கொள்ள செப்டம்பர் 14 ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டிருந்து.  ஆனால் காலக்கெடு முடிய இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் ஆதாரை புதுப்பிக்க மக்கள் பல இடங்களில் குவிந்து வருகின்றனர். இதனால் ஆதார் அட்டை புதுப்பிப்பதற்கு கால அவகாசத்தை நீட்டித்து ஆதார் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வரும் டிசம்பர் 14ஆம் தேதி வரை ஆதார் கார்ட்டை இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டை ஆன்லைன் அல்லது இ சேவை மையங்களிலும் அப்டேட் அல்லது திருத்தம் செய்து கொள்லலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு உங்களது ஆதார் அட்டையை புதுப்பித்து கொள்ளுங்கள். இல்லையென்றால் ஆதார் கார்டை திருத்தம் செய்ய வேண்டும் என்றால் ரூ.25 செலுத்த வேண்டும். அதுவே ஆஃப்லைனில், இ சேவை மையங்களில் திருத்த வேண்டும் என்றால் ரூ.50 செலுத்த வேண்டியிருக்கும்.

Also Read: பணம் எடுக்க ஏடிஎம் கார்டு எடுத்து செல்லவில்லையா?.. கவலை வேண்டாம்.. அதான் UPI இருக்கே!

ஆதாரை அப்டேட் செய்வது எப்படி?

  • அதற்கு முதலில் UIDAI-ன் https://uidai.gov.in/en/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவு செய்து Send OTP என்பதை கிளிக் செய்யவும்.
  • அப்போது உங்களது மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும் அதை பதிவிட்டு லாக் இன் செய்ய வேண்டும்.
  • இதனை தொடர்ந்து UIDAI தளத்தில் தோன்றும் பக்கத்தில் Address Update என்பதை கிளிக் செய்து அதில் Update Aadhaar Online என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு நீங்கள் அப்டேட் செய்ய வேண்டிய தகவல்களை பதிவிட்டு Process to Update Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

ஆதார் கார்டை ஆஃப்லைனில் திருத்தம் செய்ய வேண்டு  என்றால் உங்கள் வீட்டின் அருகில் உள்ள இ சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பத்தை பெற்று, கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களை பதிவு செய்து அப்டேட் செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News