5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இளம் பெண் படுகொலை.. 30 துண்டுகளாக வெட்டி ப்ரிட்ஜில் அடைத்த கொடூரம்.. பெங்களூருவில் திடுக்கிடும் சம்பவம்!

Young Woman | பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வயதே ஆன இளம் பெண்ணின் உடல் துண்டு துண்டுகளாக வெட்டி அடைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இளம் பெண் படுகொலை.. 30 துண்டுகளாக வெட்டி ப்ரிட்ஜில் அடைத்த கொடூரம்.. பெங்களூருவில் திடுக்கிடும் சம்பவம்!
கொலை செய்யப்பட்ட பெண்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 22 Sep 2024 08:51 AM

பெங்களூருவில் 29 வயது இளம் பெண் ஒருவர் 30 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்டு ஃப்ரிட்ஜில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நடந்திருக்க கூடும் என்றும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் மகாலட்சுமி என்று காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில், இந்த இளம் பெண் யார், ஏன் இப்படி கொடூரமாக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிஙக் : Srilanka Presidential Election : விறுவிறுப்பாக நடைபெறும் இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. முன்னிலை வகிக்கும் அனுரகுமார நிஸாநாயக்க!

30 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட 29 வயது இளம் பெண்

பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இளம் பெண்ணின் உடல் துண்டு துண்டுகளாக வெட்டி ப்ரிட்ஜில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் மகாலட்சுமி என்றும், 30 துண்டுகளாக அவர் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தெரிவித்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சதீஷ் குமார், வையாலி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டின் ஃப்ரிட்ஜில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம் பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சுமார் 4-5 நாட்களுக்கு முன்பு நடைபெற்றிருக்கலாம். இந்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : Court Jobs: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வேலை.. கைநிறைய சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

கொலை செய்யப்பட்ட பெண் வேறு மாநிலத்தை சேர்ந்தவர். ஆனால், கர்நாடகாவில் அவர் செட்டில் ஆகியுள்ளார். இந்த சம்பவம் நடந்த அன்று அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கணவரை பிரிந்த அந்த பெண் தனியாக வாழ்ந்து வந்ததது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆதாரங்களை சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : TVK Vijay: தேதி குறித்த விஜய்.. போலீஸிடம் அனுமதி கேட்ட புஸ்ஸி ஆனந்த்.. களைகட்டும் த.வெ.க மாநாடு!

குற்றவாளியை கண்டுபிடிக்க போலீசார் தொடர் விசாரணை

இந்த இளம் பெண் 5 நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட நிலையில், அந்த பெண்ணை படுகொலை செய்தது யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து எந்த தகவலும் தெரிய வராத நிலையில், போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஷ்ரத்தா படுகொலையுடன் ஒத்து போகும் இளம் பெண் கொலை

கடந்த 2022 ஆம் ஆண்டு டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம் பெண் அவரது காதலன் அஃதாப் அமீர் என்பரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஷ்ரத்தாவை கொடூரமாக கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்திருந்த அமீர், அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து சென்று வனப்பகுதியில் வீசி வந்துள்ளார். இதற்கிடையே, ஷ்ரத்தா வாக்கரின் தந்தை தனது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் 6 மாதங்கள் கழித்து ஷ்ரத்தாவுக்கு நடத்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்தது.

இதையும் படிங்க : Kamala Hassan: ”பிரதமர் பதவியே நிரந்தரமல்ல” மோடியை சீண்டுகிறாரா கமல்? பொதுக்குழு கூட்டத்தில் பரபர!

காதலனே இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அதேபோன்ற ஒரு சம்பவம் பெங்களூருவில் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest News