5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பிரம்மாண்ட கப்பலில் தொடங்குகிறது திருமண நிகழ்ச்சிகள்.. பிரபலங்கள் பங்கேற்பு..!

Anand Ambani & Radhika Merchant Wedding: ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகாவின் திருமண நிகழ்ச்சிகள் பிரமாண்ட கப்பலில் நாளை தொடங்குகிறது. இதில் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

பிரம்மாண்ட கப்பலில் தொடங்குகிறது திருமண நிகழ்ச்சிகள்.. பிரபலங்கள் பங்கேற்பு..!
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்
intern
Tamil TV9 | Updated On: 29 May 2024 08:35 AM

உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமனம் ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையில், திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் நாளை தொடங்கவுள்ளது. சொகுசு கப்பலில் இந்த திருமண விழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ள நிலையில், இந்த நிகழ்விற்கான அழைப்பிதழில் ‘La Vite E Un Viaggio’ என்று எழுதப்பட்டுள்ளது. இதற்கு, ‘வாழ்க்கை ஒரு பயணம்’ என்று அர்த் பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் – ஷைலாவின் மகள் ராதிகா, இவர் நியூயார்க் பல்கலையில் பட்டம் பெற்றவர். ஆனந்த் அம்பானி, தன்னுடன் படித்த ராதிகா மெர்சன்டை காதலித்து வந்தார். கடந்த ஆண்டு ஜனவரி 19, 2023-ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லமான அன்டில்லாவில் குஜராத் மாநில பாரம்பரியப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ஒரு வருடத்திற்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இதில் பல்வேறு துறைகளை சார்ந்த தொழிலதிபர்கள், சினிமா, விளையாட்டு நட்சத்திரங்கள் கலந்து கொண்டன. இந்த விழாவில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக்,வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான மார்க் சூகர்பெர்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப், தோனி, சாக்‌ஷி தோனி மற்றும் திரையுலகை சார்ந்த அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், ரஜினி காந்த், சஞ்சய் தத், ராம் சரண், சயீப் அலிகான், ரன்பீர் சிங், ரன்வீர் சிங், ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோன், சாரா அலிகான், ஆலியா பட், ஜான்வி கபூர், கேத்ரினா கைஃப், இயக்குநர் அட்லி உள்ளிட்டபல்வேறு நட்சத்திரங்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

Also Read: IPL FANS : முடிவடைந்த ஐபிஎல்.. அடுத்து என்ன..? மீம்ஸ்களால் ஆறுதல் அடையும் ரசிகர்கள்..!

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஐரோப்பாவில் தங்களது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வை நான்கு நாள் கொண்டாட திட்டமிட்டுள்னர். ஒரு பிரம்மாண்ட கப்பலில் இத்தாலியில் தொடக்கி பிரான்ஸ் வரை நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பாலிவுட் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் இந்த கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2வது முறையாக நடைபெறும் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில்,பாலிவுட் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ஆலியா பட் சல்மான்கான் ரன்வீர் சிங் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 29ஆம் தேதி 12 மணி முதல் தொடங்கும் இந்த நிகழ்வு, தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. 30 ஆம் தேதி, ரோமன் ஹாலிடே அமைப்புடன் விருந்தும், மாலையில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 31ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில், சுமார் 800 விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்றும், பிரம்மாண்ட விருந்தோடு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான பணியில், 600 ஊழியர்கள் பணியில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Also Read: தேதி குறித்த ரியல்மீ.. நார்சோ என்.65 மே 31 வெளியீடு: விலை இவ்வளவு தானா?

ஜூலை மாதம் 12 ஆம் தேதி பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க்கில் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாகவும், இந்த திருமண நிகழ்ச்சியில் முக்கிய வி.ஐ.பி.க்கள், திரைப்பட பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல பங்கேற்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Latest News