5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வங்கதேச எம்.பி. கொல்கத்தாவில் படுகொலை? பரபர பின்னணி!

வங்கதேச எம்.பி. அன்வருல் ஆசிம் கொல்கத்தாவில் கொல்லப்பட்டதை மேற்கு வங்க காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.  வங்கதேச நாட்டை ஆளும் ஆவாமி லீக் கட்சியைச் சேர்ந்தவர் அன்வருல் ஆசிம். இவர் கடந்த மே 12ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தாவிற்கு வந்திருந்த அவர், கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் அன்வருல் ஆசிமின் சடலம் இதுவரை கிடைக்கவில்லை.

வங்கதேச எம்.பி. கொல்கத்தாவில் படுகொலை? பரபர பின்னணி!
வங்கதேச எம்.பி.
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 22 May 2024 16:32 PM

காணாமல் போன வங்கதேச எம்.பி.: வங்கதேச எம்.பி. அன்வருல் ஆசிம் கொல்கத்தாவில் கொல்லப்பட்டதாக மேற்கு வங்க காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.  வங்கதேச நாட்டை ஆளும் ஆவாமி லீக் கட்சியைச் சேர்ந்தவர் அன்வருல் ஆசிம். இவர் கடந்த மே 12ஆம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தாவிற்கு வந்திருந்தார். மே 12ஆம் தேவி இரவு 7 மணிக்கு தனது குடும்ப நண்பரான கோபால் பிஸ்வாஸ் என்பவரை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. தொடர்ந்து, மே 13ஆம் தேதி டாக்டரைப் பார்க்க வேண்டும் என்று கூறி, அன்றைய தினம் மதியம் 1.41 மணிக்கு கோபாலின் வீட்டில் இருந்து, டாக்டர் அன்வருளை பார்க்க சென்றார். டாக்டரை பார்ப்பதற்காக டாக்சியில் கிளம்பிய அன்வருல் ஆசிம், மாலை தனது நண்பன் கோபாலை தொடர்பு கொண்டு தான் டெல்லி செல்வதாகவும், அங்கு சென்றடைந்ததும் அழைப்பதாகவும் கூறியிருக்கிறார். அவரையும் கால் செய்ய வேண்டாம் என்று அன்வருல் கூறியதாக தெரிகிறது.

Also Read: “நான் மனிதப் பிறவியே அல்ல.. இந்த பூமிக்கு என்னை அனுப்பியது கடவுள்தான்” பிரதமர் மோடி பேச்சு

கொல்கத்தாவில் கொலை:

மே 15ஆம் தேதி மற்றொரு எண்ணில் இருந்து வாட்ஸ் அப்பில் டெல்லி வந்தடைந்ததாகவும், அங்கு விஐபிகளுடம் தங்கி இருப்பதாகவும் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். இதே தகவலை தனிப்பட்ட உதவியாளர் ரூஃப் என்பவருக்கும் அனுப்பி இருக்கிறார் எம்.பி. அன்வருல். மே 17ஆம் தேதி அன்வருலின் குடும்பத்தினர் அவரை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், அன்வருல் பதிலளிக்காததால் போலீசில் புகார் அளித்தனர்.

கொல்கத்தாவின் பராநகர் காவல் நிலையத்தில் முதற்கட்ட புகார் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் வங்கதேச எம்பி அன்வருல் கடைசியாக நியூடவுன் நகருக்கு சென்றிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அங்கு நியூடவுன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவரை சந்திக்க சென்ற இடத்தில் கொல்லப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சடலம் எங்கே?

இதுகுறித்து போலீசார் பலரிடம் விசாணை நடத்தினர். அப்போது, அன்வருலை கொன்றதாக ஒரு நபர் வாக்குமூலம் அளித்திருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், எம்.பி. அன்வருலின் சடலம் கிடைக்கவில்லை. இது தொடர்பாக பிதான்நகர் போலீசார்  விசாரணை நடத்தி வருகிறது. இவரது சடலத்தை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொலைக்கான காரணம் என்ன? யார் கொலை செய்தார்? சடலம் எங்கே? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொல்கத்தாவிற்கு சிகிச்சைக்காக வந்த வங்கதேச எம்.பி. கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் இருநாட்டு அரசு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இன்ஸ்டா ரீல்ஸ் மோகம்.. 100 அடி உயரத்தில் இருந்து ஏரியில் குதித்த இளைஞர்.. பரிதாப பலி!

Latest News