5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறிப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு..

எப்ஐஆர் பதிவு செய்ய திலக் நகர் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புகாரில் நிர்மலா சீதாராமன், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, பாஜக தலைவர் நளின் குமார் சுட்டீல் மற்றும் மத்திய, மாநில பாஜக அலுவலகங்கள், அமலாக்கத் துறை ஆகியவை அடங்கும். ஏப்ரல் 2019 முதல் ஆகஸ்ட் 2022 வரை, தொழிலதிபர் அனில் அகர்வாலின் நிறுவனத்திடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் தோராயமாக ரூ.230 கோடியும், அரபிந்தோ பார்மா நிறுவனத்திடமிருந்து ரூ.49 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறிப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு..
நிர்மலா சீதாராமன்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 28 Sep 2024 13:44 PM

தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் பறித்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய பெங்களூரு மக்கள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் ஊழல் நடந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜனாதிகாரி சங்கர்ஷ பரிஷத்தை சேர்ந்த ஆதர்ஷ் ஆர். ஐயர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நளின் குமார் கட்டீல் மற்றும் பி ஓய் விஜயேந்திரா ஆகியோருக்கு எதிராக பெங்களூருவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் புகார் அளித்தார். புகாரை ஆய்வு செய்த 42வது ஏசி எம்எம் நீதிமன்றம், புகாரின் நகல் மற்றும் அது தொடர்பான ஆவணங்களை பதிவுப் பிரிவுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்தது.

இந்த ஆவணங்களை பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்திற்கு அனுப்புமாறு நீதிமன்ற அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. எப்ஐஆர் நிலுவையில் உள்ள நிலையில், விசாரணை அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எப்ஐஆர் பதிவு செய்ய திலக் நகர் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புகாரில் நிர்மலா சீதாராமன், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, பாஜக தலைவர் நளின் குமார் சுட்டீல் மற்றும் மத்திய, மாநில பாஜக அலுவலகங்கள், அமலாக்கத் துறை ஆகியவை அடங்கும். ஏப்ரல் 2019 முதல் ஆகஸ்ட் 2022 வரை, தொழிலதிபர் அனில் அகர்வாலின் நிறுவனத்திடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் தோராயமாக ரூ.230 கோடியும், அரபிந்தோ பார்மா நிறுவனத்திடமிருந்து ரூ.49 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அச்சுறுத்தும் குரங்கு அம்மை.. தடுப்பு நடவடிக்கைகளை வெளியிட்ட மத்திய சுகாதார அமைச்சகம்..

பிப்ரவரியில், உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை “அரசியலமைப்புக்கு எதிரானது” என்று கருதியது. இது குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதாகக் கூறியது. 2018 ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் பண நன்கொடைகளை மாற்றுவதையும், அரசியல் நிதியில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.

இந்த வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். “மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நிர்மலா சீதாராமன் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை.. 18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த அவர்கள், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டவுடன் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் அவரை ராஜினாமா செய்ய பாஜக கோருமா? என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

வழங்குநரின் விவரங்களை வெளியிடாமல் அரசியல் கட்சிகள் நிதி பெறும் வசதியை, தேர்தல் பத்திரங்கள் வழங்கியது. ஆனால், இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானதாக இருப்பதாக கடந்த பிப்ரவரி 15ம் தேதி, தேர்தல் பத்திர முறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. பாஜக தலைமையிலான மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட இச்சட்டம், ரத்து செய்யப்பட்டது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest News