5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: மகளை கொலை செய்ய முடிவெடுத்த தாய்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

வீட்டில் இருந்த மகளை அல்கா மனதை மாற்றுவதற்காக ஃபரூக்கபாத் நகரிலுள்ள தனது தாயார் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் தொடர்ச்சியாக மகளின் நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படாமல் இருந்துள்ளது. அதேசமயம் அங்குள்ள சுபாஷ் என்ற நபருடன் அல்காவின் மகளுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. 38 வயதான சுபாஷ் மீது காவல் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

Crime: மகளை கொலை செய்ய முடிவெடுத்த தாய்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
கைது செய்யப்பட்ட சுபாஷ்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 14 Oct 2024 08:20 AM

உத்தரப்பிரதேசம்: மகள் காதலித்த நபரை கொலை செய்ய கூலிப்படை ஆட்களை தாய் நாடிய நிலையில், கடைசியில் அவரே கொல்லப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் காவல்துறையினர் மட்டுமின்றி அப்பகுதி மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தன்னுடைய குழந்தைகள் காதலிப்பதால் அதனை தடுக்க சில பெற்றோர்கள் எந்த எல்லைக்கும் செல்லும் நிலை இன்றும் தொடர்கதையாகி வருகிறது. ஒரு பக்கம் அக்கறை என எடுத்துக் கொண்டாலும், மறுபக்கம் கௌரவம், சாதி, மதம் என அனைத்து நிலைகளும்  காரணமாகி வருகிறது. பெற்ற குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு மனப்பான்மை சென்று விடுகிறது. இந்த ஆவணக்கொலைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகளும் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்படியான நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து காணலாம்.

என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசம் மாநிலம் எல்லா நகரில் அல்லாப்பூர் பகுதியில் அல்கா என்ற 36 வயது பெண்மணி வசித்து வருகிறார். இவருடைய மகள் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் காதலித்த அகிலேஷ் என்ற நபருடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து எல்லா நகரத்துக்குட்பட்ட காவல் நிலையத்தில் தனது மகளை மீட்டுத்தருமாறு அல்கா புகார் செய்தார். இதனடிப்படையில் கைது செய்யப்பட்ட அகிலேஷ் சிறைக்கு சென்றுள்ளார். இதனிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அல்கா சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

Also Read: Driverless Cybercab: டிரைவரே கிடையாது… விரையில் அறிமுகமாகும் ரோபோ டாக்ஸி.. சிறப்பம்சங்கள் என்ன?

தொடர்ந்து வீட்டில் இருந்த மகளை அல்கா மனதை மாற்றுவதற்காக ஃபரூக்கபாத் நகரிலுள்ள தனது தாயார் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் தொடர்ச்சியாக மகளின் நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படாமல் இருந்துள்ளது. அதேசமயம் அங்குள்ள சுபாஷ் என்ற நபருடன் அல்காவின் மகளுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. 38 வயதான சுபாஷ் மீது காவல் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் 10 ஆண்டுகள் சிறை தண்டனைப் பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஊருக்கு வந்துள்ளார்.

இப்படியான நிலையில் மகளின் நடத்தை சரியில்லாததால் கோபமடைந்த தாய் அல்கா அவரை கொலை செய்ய முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து கூலிப்படையை அணுகவும் திட்டமிட்டிருந்தார். அதன்படி தன்னுடைய மகள் காதலிக்கும் நபர் என தெரியாமல் சுபாஷை அணுகி விவரத்தை சொல்லி ரூ.50 ஆயிரம் பணத்தை கொடுத்து மகளை கொலை செய்ய தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தனது தாய் வீட்டில் இருந்து மகளை தன் வீட்டிற்கு அழைத்து வந்த அல்கா அவரை சுபாஷிடம் கொலை செய்யவும் ஒப்படைத்துள்ளார்.

Also Read: Mushrooms Benefits: மழைக்காலத்தில் காளான் இவ்வளவு நன்மைகளை தருமா..? அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி!

ஆனால் முன்கூட்டியே சுபாஷ் செய்த திட்டத்தின்படி, தனது காதலியை அவர் ஆக்ராவில் உள்ள தோழி வீட்டில் தங்க வைத்துள்ளார். மேலும் மகளை கொலை செய்தது போல புகைப்படங்களை தயார் செய்து அல்காவுக்கு அனுப்பியுள்ளார்.  அதைப் பார்த்து அல்கா நம்பவில்லை என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் தன்னை கொலை செய்ய துணிந்த அல்காவை கொன்றால் திருமணம் செய்து கொள்வதாக சுபாஷிடம் மகள் தெரிவித்துள்ளார்.

அல்கா ஏற்கனவே மகள் கொலை செய்யப்பட்டதை நம்பாததால் நேரடியாக ஆக்ராவுக்கு வந்து பார்க்குமாறு சுபாஷ் கூறியுள்ளார். சுபாஷின் திட்டத்தை அறியாத அல்கா கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி ஆக்ராவுக்கு வந்து அவரை சந்தித்துள்ளார். அங்கு மகள் உயிரோடு இருப்பதைக் கண்டு திடுக்கிட்டுள்ளார். மேலும் மகளின் காதலன் தான் சுபாஷ் என்ற உண்மையும் தெரிய வந்ததால் அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து தான் சிக்கிக்கொண்டதை உணர்ந்த அல்கா அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார். ஆனால் சுபாஷூம், மகளும் சேர்ந்து அல்காவை கழுத்தை நெறித்துக் கொன்றனர். பின்னர் உடலை அங்கிருக்கும் வயல்வெளியில் வீசியுள்ளனர்.

இதனிடையே வயலில் பெண் சடலம் இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் போலீசுக்கு புகாரளித்தனர். அதன்படி அல்கா உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார், சுபாஷ் மற்றும் அவரது மகள் கொலை குற்றவாளிகள் என கண்டறிந்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest News