மளமளவென பற்றிய தீ… உடல் கருகி 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு.. தலைநகரில் சோகம்! - Tamil News | | TV9 Tamil

மளமளவென பற்றிய தீ… உடல் கருகி 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு.. தலைநகரில் சோகம்!

Updated On: 

26 May 2024 07:57 AM

தலைநகர் டெல்லியில் விவேக் விஹார் பகுதியில் குழந்தைகள் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு  ஆயிரக்கணக்கான பச்சிளம் குழந்தைகள் சிசிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு 11.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 11 குழந்தைகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மளமளவென பற்றிய தீ... உடல் கருகி 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு.. தலைநகரில் சோகம்!

டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து

Follow Us On

7 குழந்தைகள் உயிரிழப்பு: தலைநகர் டெல்லியில் விவேக் விஹார் பகுதியில் குழந்தைகள் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு  ஆயிரக்கணக்கான பச்சிளம் குழந்தைகள் சிசிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு 11.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்து குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7  குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  இதுகுறித்து போலீசார் கூறுகையில், “மீட்புப் பணி இன்னும் நடந்து வருகிறது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து விசாரித்து வருகிறோம்.

Also Read: ”உங்க கருத்து தேவையில்ல” ஆதரவளித்த பாக். முன்னாள் அமைச்சருக்கு கெஜ்ரிவால் பதிலடி!


மொத்தம் ஒன்பது தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன. 7 பச்சிளம் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மருத்துவமனை கட்டடத்தில் இருந்து 11 குழந்தைகளை மீட்டுள்ளோம்” என்றார். இங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம்? எப்படி தீ பற்றியது? என பல்வேறு கோணங்களில்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு திடலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இங்கு உள்ள வணிக வளாகத்தில் சிறுவர்களுக்கென டிஆர்பி விளையாட்டு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குள்ள தற்காலிக கூடராம் ஒன்றில் சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

Also Read: பிறக்கப்போவது ஆணா? பெண்ணா? கர்ப்பிணியின் வயிற்றை கிழித்த கொடூர கணவன்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
கல்லீரலை சுத்தப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
சியா விதையில் இவ்வளவு ஆபத்துகள் உள்ளதா?
Exit mobile version