ட்ரீட் தர மாட்டியா? 16 வயது சிறுவனை குத்திக் கொன்ற நண்பர்கள்.. நடுரோட்டில் பயங்கரம்! - Tamil News | delhi boy stabbed to death for refusing to give treat for new mobile phone in tamil news | TV9 Tamil

ட்ரீட் தர மாட்டியா? 16 வயது சிறுவனை குத்திக் கொன்ற நண்பர்கள்.. நடுரோட்டில் பயங்கரம்!

Published: 

26 Sep 2024 15:59 PM

புதிதாக செல்போன் வாங்கியதற்கு பார்ட்டி வைக்காததால், ஆத்திரம் அடைந்த 3 நண்பர்கள் 16 வயது சிறுவனை குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய செல்போனை வாங்கிக் கொண்டு சாலையில் செல்லும்போது சிறுவன் சச்சினின் நண்வர்கள் அவனை வழிமறித்து ட்ரீக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ட்ரீக் தர மறுத்த 16 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்து தப்பியோடியுள்ளனர்.

ட்ரீட் தர மாட்டியா? 16 வயது சிறுவனை குத்திக் கொன்ற நண்பர்கள்.. நடுரோட்டில் பயங்கரம்!

மாதிரிப்படம்

Follow Us On

புதிதாக செல்போன் வாங்கியதற்கு பார்ட்டி வைக்காததால், ஆத்திரம் அடைந்த 3 நண்பர்கள் 16 வயது சிறுவனை குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் செல்போனுக்கு அடிமையாகி உள்ளனர் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் செல்போனுக்காக பல அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றனர். இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. கிழக்கு டெல்லியின் ஷகர்பூரில் வசித்து வந்தவர் சச்சின். இவருக்கு 16 வயதாகிறது. இவர் அதே பகுதியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.

16 வயது சிறுவன் கொடூர கொலை:

இவர் புதிதாக ஒரு ஸ்மார்ட் போனை வாங்கியுள்ளார். புதிய செல்போனை வாங்கிக் கொண்டு சாலையில் செல்லும்போது சிறுவன் சச்சினின் நண்வர்கள் அவனை வழிமறித்து பேசியுள்ளனர். அப்போது, புது செல்போன் வாங்கியதற்கு பார்ட்டி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், சச்சின் தன்னால் ட்ரீட் இப்போது வைக்க முடியாது என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார்.

Also Read: பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் புகார்.. இளம் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!

ஆனால், பார்ட்டி தர முடியாது எனக் கூறியதால், சச்சினிடம் அவரது நண்பர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். முதலில் வாக்குவாதம் செய்த அவர்கள், பிறகு சச்சினை தாக்கி உள்ளனர். மேலும், கூர்மையான கத்தியை எடுத்து முதுகில் குத்தியுள்ளனர். இதில் சச்சின் ரத்த வெள்ளத்தில் சாலையிலேயே விழுந்துள்ளனர்.

சச்சினை குத்திவிட்டு அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனை அடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த சச்சினை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்தவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்ததில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ட்ரீட் தர மறுத்ததால் ஆத்திரம்:

நேற்று முன்தினம் இரவு ஷகர்பூர் பகுதியில் இரவு 7.15 மணிக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரத்த வெள்ளத்தில் சிறுவன் கிடப்பதை கண்ட போலீசார் அதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சிறுவன் கொல்லப்பட்டது தெரியவந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அதில் சிறுவனின் முதுகில் ஆழமான கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் 16 வயது சிறுவனை கொலை செய்த அவனது நண்பர்கள் மூன்று பேரையும் கண்டறிந்து போலீசார் கைது செய்தனர்.

Also Read: ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. அதிர்ச்சி சம்பவம்!

மேலும், கொலை செய்யப்பட்ட ஆயுதங்களையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பார்ட்டி தர மறுத்த 16 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மேலும், சிறுவர்கள் ஆயுதங்களை எடுப்பதை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Stories
தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறிப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு..
Mpox: அச்சுறுத்தும் குரங்கு அம்மை.. தடுப்பு நடவடிக்கைகளை வெளியிட்ட மத்திய சுகாதார அமைச்சகம்..
UNSC Counsil: இந்தியாவுக்கு பெருகும் ஆதரவு.. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைக்குமா? பிரட்டன் எடுத்த முடிவு!
PM Modi CM Stalin Meet: 30 நிமிடம்.. பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்.. என்ன பேசுனாங்க தெரியுமா?
Uttarpradesh: திருப்பதி லட்டு சர்ச்சை.. உ.பி., கோயில்களில் பிரசாதங்களுக்கு கடும் கட்டுப்பாடு..!
Uttarpradesh Crime News: ”பள்ளிக்கு புகழ் கிடைக்கணும்” 2ம் வகுப்பு மாணவன் நரபலி.. ஆசிரியர்கள் செய்த கொடூரம்!
ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்..!
சருமத்திற்கு பல நன்மைகளை தரும் கற்றாழை..!
புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
Exit mobile version