5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: ஒரே குடும்பத்தில் 6 பேர் கொலை.. ஹரியானாவை அலற விட்ட ராணுவ வீரர்

Haryana: ஹரியானாவில் நிலத்தகராறு காரணமாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. அந்நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த சம்பவமானது ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் உள்ள நரேன்கர் நகரில் நடைபெற்றுள்ளது.

Crime: ஒரே குடும்பத்தில் 6 பேர் கொலை.. ஹரியானாவை அலற விட்ட ராணுவ வீரர்
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 23 Jul 2024 13:03 PM

கொலை சம்பவம்: ஹரியானாவில் நிலத்தகராறு காரணமாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இதுதொடர்பாக அந்நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த சம்பவமானது ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் உள்ள நரேன்கர் நகரில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள ரேட்டர் கிராமத்தில் பூஷன் குமார் என்ற முன்னாள் ராணுவ வீரர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த குடும்பத்தில் பூஷன் குமாரின் தாய் சரூபி தேவி (65), சகோதரர் ஹரிஷ் குமார் (35), மைத்துனி சோனியா (32), அவர்களின் மகன் மயங்க் (6 மாத குழந்தை) மற்றும் இரண்டு மகள்கள் சிறுமிகள் பாரி (7), யாஷிகா (5) ஆகியோர் இருந்துள்ளனர்.

Also Read: Suriya: இளைய சமூகத்தை நாசம் செய்யும் சூர்யா.. ப்ளூ சட்டை மாறன் விளாசல்!

நிலத்தகராறு

இதனிடையே இரு சகோதரர்களுக்கு இடையே நிலத்தகராறு ஏற்பட்டு பிரச்னை இருந்து வந்துள்ளது.இதனிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் சகோதர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பூஷன் குமார் நடு இரவில் தூங்கிக்கொண்டிருந்த தனது தாய், சகோதரன், அவரின் மனைவி, 3 குழந்தைகள் என 6 பேரை கோடரியால் வெட்டிக்கொலை செய்துள்ளார். மேலும் அவர்களை வீட்டிலேயே எரிக்கவும் முயன்றுள்ளார். இதற்கிடையில் ஒரு சிறுமியின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் எரிந்த நிலையில் 5 பேரின் உடல்களையும், படுகாயத்துடன் ஒரு சிறுமியையும் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.ஆனால் அச்சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அனைவரின் உடல்களும் அம்பாலா கண்டோன்மென்ட் சிவில் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Also Read: Employment Budget 2024: இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு!

இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய பூஷன் குமாரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஹரியானா மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனேவை அதிர வைத்த சம்பவம்

இதற்கிடையில் புனேவில் உள்ள தலேகான் சக்கன் சாலையில் உள்ள இந்திராயானி ஆற்றில் பெண்ணின் உடலை வீசியதாக இரண்டு பேரை அந்நகர போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் தனது மனைவிக்கு கருக்கலைப்பு செய்ய முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பெண் உயிரிழக்க நண்பருடன் சேர்த்து அந்த பெண்ணின் உடலை ஆற்றில் வீசியுள்ளார். ஏற்கனவே அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் அம்மாவின் உடலை ஆற்றில் வீசுவதை கண்டு அவர்கள் கதறி அழுதுள்ளனர். இதனால் பரிதாப்படுவதற்கு பதிலாக அவ்விரு குழந்தைகளையும் இரு நபர்களும் ஆற்றில் வீசி கொலை செய்துள்ளனர். இருவரையும் கைது செய்த நிலையில் ஆற்றில் வீசப்பட்ட 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

Latest News