5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சடலத்துடன் செல்ஃபி.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்.. பின்னணி என்ன?

UP Crime: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் மனைவியை கொன்று அவருடன் கணவர் செல்ஃபி எடுத்து உறவினர்களுக்கு அனுப்பிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, கணவர் ஷியாம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக தெரிகிறது. இப்படியான நிலையில், சம்பவத்தன்று மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில், அவரது கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்.

சடலத்துடன் செல்ஃபி.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்.. பின்னணி என்ன?
கொலை (மாதிரிப்படம்)
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 18 May 2024 12:05 PM

உத்தர பிரதேசத்தில் பயங்கரம்: நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் நடக்கும் வன்முறைகள் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்தாலும் நின்ற பாடில்லை. இப்படியான நிலையில், தற்போது உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் மனைவியை கொன்று அவருடன் கணவர் செல்ஃபி எடுத்து உறவினர்களுக்கு அனுப்பிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான ஷியாம் கோஸ்வாமி.  இவர் கார் பாகங்களை விற்பனை செய்யும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பிரியா (28). இந்த தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் எட்டா மாவட்டத்தில் இருக்கும் தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறார்.

Also Read : பா.ஜ.க.வுக்கு ஓட்டு போட்டால் கெஜ்ரிவால் சிறைக்கு செல்வாரா? உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு

மனைவியை கொன்று கணவர் தற்கொலை:

இதற்கிடையில், காலை நேரத்தில் மனைவியை கொலை செய்த அவர், மதியம் 1 மணி வரை மனைவியின் சடலத்துடன் இருந்திருக்கிறார். அதன்பின், அவருடன் செல்ஃபி எடுத்து உறவினர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பிவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த கோஸ்வாமியின் தம்பி பிரவீன் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அங்கு கோஸ்வாம் மற்றும் பிரியா இறந்த நிலையில் கிடந்துள்ளனர். இதனை போலீசாருக்கு பிரவீன் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் இரண்டு பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து போலீசார் அதிகாரி கூறுகையில், “கோஸ்வாமி தனது மனைவி ப்ரியா மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கொலை செய்திருக்கிறார். பின்னர், அவரும் தற்கொலை செய்துள்ளார். இவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மனைவியை கொன்று வாட்ஸ் அப்பில் உறவினர்களுக்கு புகைப்படங்களை அனுப்பி இருக்கிறார். இதன் மூலம் தான் எங்களுக்கு தகவல் கிடைத்தது” என்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனைவியை கொலை செய்த உறவினர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் புகைப்படங்களை கணவர் அனுப்பிவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வாகாது. மன அழுத்தம், தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் அதனை மனம் விட்டு பேசி சரிசெய்ய முடியும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044-24640050

Also Read : ஸ்வாதி மாலிவால் விவகாரம்.. கெஜ்ரிவால் உதவியாளருக்கு சம்மன்.. 10 முக்கிய நிகழ்வுகள்!

Latest News