J&K Assembly Elections: ஜம்மு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு.. யாருக்கு சாதகமாக உள்ளது களம்? - Tamil News | Jammu and Kashmir election 2024 Phase 1 polling began for 24 constituencies, PM Modi urges in a X post everyone to vote | TV9 Tamil

J&K Assembly Elections: ஜம்மு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு.. யாருக்கு சாதகமாக உள்ளது களம்?

Published: 

18 Sep 2024 09:54 AM

10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீர் மக்கள் தங்கள் சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கின்றனர். கடந்த 2014ல் இங்கு ஒரே கட்டமாக 87 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. பின்னர் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. 370 நீக்கப்பட்டு, யூனியன் பிரதேசம் மற்றும் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு, இப்போது இடங்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. 5 கட்ட தேர்தல்களுக்கு பதிலாக 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு (ஜம்முவில் 8 மற்றும் காஷ்மீரில் 16) இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

J&K Assembly Elections: ஜம்மு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு.. யாருக்கு சாதகமாக உள்ளது களம்?

கோப்பு புகைப்படம் (pic courtesy: twitter)

Follow Us On

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலின் முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 24 சட்டமன்ற தொகுதிகளுக்கு மொத்தம் 219 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், அவர்களின் தலைவிதியை 23.27 லட்சம் வாக்காளர்கள் தீர்மானிக்கிறார்கள். முதல் கட்டமாக தெற்கு காஷ்மீர் பகுதியில் 16 இடங்களுக்கும், ஜம்மு பகுதியில் 8 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவில், பிடிபியின் கோட்டையாக தேர்தல் நடத்தப்படுகிறது, ஆனால் இந்த முறை மெகபூபா முப்திக்கு தனது அரசியல் இருப்பைக் காப்பாற்றுவது சவாலாக உள்ளது, மேலும் ஜம்மு பிராந்தியத்தில் குறைவான இடங்கள் இருப்பதால், தேசிய மாநாட்டு மற்றும் காங்கிரஸின் நம்பகத்தன்மை ஆபத்தில் உள்ளது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீர் மக்கள் தங்கள் சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கின்றனர். கடந்த 2014ல் இங்கு ஒரே கட்டமாக 87 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. பின்னர் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. 370 நீக்கப்பட்டு, யூனியன் பிரதேசம் மற்றும் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு, இப்போது இடங்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. 5 கட்ட தேர்தல்களுக்கு பதிலாக 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு (ஜம்முவில் 8 மற்றும் காஷ்மீரில் 16) இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.


இன்று நடைபெறும் தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், “ ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள அனைவரும் அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

முதல் கட்ட தேர்தலில் மொத்தமுள்ள 24 இடங்களில், தெற்கு காஷ்மீரில் 16 இடங்கள் உள்ளன. பாம்பூர், டிரால், புல்வாமா, ராஜ்போரா, ஜைனாபோரா, ஷோபியான், டிஎச் போரா குல்கம், தேவ்சர், தூரு, கோகர்நாக், அனந்த்நாக் மேற்கு, அனந்த்நாக், ஸ்ரீகுஃப்வாரா-பிஜ்பேரா, ஷங்காஸ்-அனந்த்நாக் கிழக்கு மற்றும் பஹல்காம் அடங்கும். இது தவிர, ஜம்மு பிராந்தியத்தில் 8 இடங்கள் உள்ளன, இதில் இந்தர்வால், கிஷ்த்வார், பேடர்-நாகசென் பதேர்வா, தோடா, தோடா மேற்கு, ராம்பான் மற்றும் பனிஹால் ஆகிய இடங்களுக்கு தேர்தல் நடப்படுகிறது. தோடா, கிஷ்த்வார், ரம்பான் ஆகிய இடங்களில் பாஜக, காங்கிரஸ் மற்றும் சிபிஐஎம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மேலும் படிக்க: ஆயதங்களாக மாறிய பேஜர்கள்… திடீரென வெடித்ததால் பரபரப்பு.. லெபனானில் இஸ்ரேல் ஆட்டம்?

ஜம்மு பிராந்தியத்தின் செனாப் பகுதியின் தோடா, கிஷ்த்வார் மற்றும் ரம்பன் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு பாஜக மற்றும் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி மற்றும் சுயேச்சைகள் இடையேதான் முக்கிய போட்டி. 64 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர், அவர்களில் 25 பேர் சுயேச்சை வேட்பாளர்கள். பதேர்வாவில் அதிகபட்சமாக 10 வேட்பாளர்களும், தோடா-இன்டர்வாலில் தலா 9 பேரும், தோடா மேற்கு மற்றும் ரம்பானில் தலா 8 பேரும், கிஷ்த்வார் மற்றும் பனிஹாலில் தலா 7 பேரும், படா-நாகசெனில் ஆறு பேரும் களத்தில் உள்ளனர். இதில் தோடா மேற்கு மற்றும் பாதர் நாகசேனி புதிய சட்டமன்ற தொகுதிகள். நேஷனல் கான்பரன்ஸ் மற்றும் காங்கிரஸ் இடையே 8 தொகுதிகளில் கூட்டணி உள்ளது, அவற்றில் பானிஹால், பதேர்வா மற்றும் தோடாவில் நட்புரீதியான போட்டி நிலவுகிறது.

2014 தேர்தலில், தெற்கு காஷ்மீர் மற்றும் செனாப் பள்ளத்தாக்கில் உள்ள 22 இடங்களில் PDP அதிகபட்சமாக 11 இடங்களை வென்றது. பாஜக மற்றும் காங்கிரஸ் தலா 4 இடங்களையும், தேசிய மாநாட்டு கட்சி 2 இடங்களையும், சிபிஎம் ஒரு இடத்தையும் கைப்பற்றின. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு தோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் தலா ஒரு இடம் அதிகரித்து, இந்த முறை 24 இடங்கள் கிடைத்துள்ளன. முதல் கட்டத்தில் பெரும்பாலான இடங்கள் தெற்கு காஷ்மீரில் உள்ளன, அங்கு பிடிபி மிகவும் வலுவாகக் கருதப்படுகிறது.

மேலும் படிக்க: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தின் எதிரொலி..

பிடிபியின் நிலை முன்பு போல் இல்லாத காரணத்தால் முதல் கட்ட தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே முக்கிய போட்டி நிலவுகிறது. தெற்கு காஷ்மீரின் செனாப் பள்ளத்தாக்கின் அனந்த்நாக், புல்வாமா, ஷோபியான், குல்காம் மற்றும் தோடா, கிஷ்த்வார் மற்றும் ராம்பன் மாவட்டங்களில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலில், சிபிஐ(எம்) மூத்த தலைவர் எம்.ஒய்.தாரிகாமி, மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி, வஹீத்-உர்-ரஹ்மான் பாரா, சர்தாஜ். மதானி, முன்னாள் எம்.பி.க்கள் ஹஸ்னைன் மசூடி, சவுகத் அகமது கனாய், காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளர் ஜி.ஏ.மிர் மற்றும் பாஜகவின் சோபி யூசுப் ஆகியோரின் வெற்றி வாய்ப்பு கேள்குறியாக உள்ளது.

இது தவிர, முன்னாள் அமைச்சர் சுனில் சர்மா, சக்திராஜ் பரிஹார், முன்னாள் எம்எல்ஏ தலிப் சிங் பரிஹார், பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட பரிஹார் சகோதரர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஷகுன் பரிஹார், தேசிய மாநாட்டுத் தலைவர் சஜ்ஜத் அகமது கிட்ச்லு, மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் விகார் ரசூல் வானி ஆகியோரின் வெற்றி வாய்ப்பு ஆபத்தில் உள்ளது என்றே சொல்லப்படுகிறது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version