5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: விடுதிக்குள் புகுந்து இளம்பெண் கொடூரமாக குத்திக்கொலை.. பெங்களூருவை அதிர வைத்த கிரைம்!

பெங்களூருவில் உள்ள தனியார் விடுதிக்குள் புகுந்த இளைஞர், இளம்பெண்ணை சரமாரியாக குத்திக் கொலை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த அபிஷேக் அதே விடுதியில் தங்கியுள்ள வேறொரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அபிஷேக்குக்கு வேலை கிடைக்காததால் அந்த பெண் அவரை விட்டு விலகியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அபிஷேக் தனது முன்னாள் காதலியை கொலை செய்ய திட்டமிட்டார்.

Crime: விடுதிக்குள் புகுந்து இளம்பெண் கொடூரமாக குத்திக்கொலை.. பெங்களூருவை அதிர வைத்த கிரைம்!
கொலை செய்யப்பட்ட பெண்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 26 Jul 2024 15:02 PM

இளம்பெண் கொலை: பெங்களூருவில் உள்ள தனியார் விடுதிக்குள் புகுந்த இளைஞர், இளம்பெண்ணை சரமாரியாக குத்திக் கொலை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகையை குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தையே ஒரு சம்பவம் உலுக்கியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரு கேரமங்களா பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி வந்தார் 24 வயதான கிருத்தி குமாரி. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் சம்பவத்தன்று வேலை முடித்துவிட்டு விடுதிக்கு இரவு 10 மணிக்கு வந்திருக்கிறார்.

பின்னர் வழக்கம்போல் விடுதியின் அறையில் இருந்திருக்கிறார்.  அப்போது விடுதிக்குள் இளைஞர் ஒருவர் புகுந்து கிருத்தி குமாரியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து, அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிருத்தி குமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

காரணம் என்ன?

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “இந்த சம்பவம் மூன்றாவது மாடியில் நடந்துள்ளது. இரவு 11.10 மணி முதல் 11.30 மணி வரை நடந்துள்ளது. அந்த பெண்ணை நான்கு முறை குத்திக் கொலை செய்துள்ளார். விடுதியின் காப்பாளர் இரவு உணவிற்கு சென்றபோது அந்த இளைஞர் விடுதிக்குள் புகுந்து பெண்ணை கொலை செய்திருக்கிறார்” என்றனர். கொலை செய்த நபர் அபிஷேக் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட கிருத்தி குமாரிக்கும், அபிஷேக்குக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த அபிஷேக் அதே விடுதியில் தங்கியுள்ள வேறொரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அபிஷேக்குக்கு வேலை கிடைக்காததால் அந்த பெண் அவரை விட்டு விலகியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அபிஷேக் தனது முன்னாள் காதலியை கொலை செய்ய திட்டமிட்டார். இதனால் அவர் தங்கியுள்ள விடுதியில் நுழைந்ததாகவும், அங்கு தவறுதலாக கிருத்தி குமாரியை கொலை செய்துவிட்டு தப்பி ஒடியதாக போலீசார் தெரிவித்தனர். இதனை அடுத்து, அபிஷேக் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். விடுதிக்குள் இளைஞர் புகுந்து பெண்ணை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest News