முத்தம் கொடுத்தது தப்பா? மணமகனை தாக்கிய மணமகள் குடும்பம்..உத்தர பிரசேதத்தில் ரணகளம்! - Tamil News | | TV9 Tamil

முத்தம் கொடுத்தது தப்பா? மணமகனை தாக்கிய மணமகள் குடும்பம்..உத்தர பிரசேதத்தில் ரணகளம்!

Updated On: 

23 May 2024 16:27 PM

உத்தர பிரதேசத்தில் கடந்த 21ஆம் தேதி நடந்த திருமணத்தின்போது மணமகன், மணமகளுக்கு முத்தம் கொடுத்ததை அடுத்து, திருமணம் போர்க்களத்தில் நின்றிருக்கிறது. சடங்குகள் நடந்துக் கொண்டிருக்கும்போது மணமகளுக்கு மணமகள் முத்தம் கொடுத்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த மணமகள் குடும்பத்தினர், மணமகனின் குடும்பத்தினரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால், மணமகளின் தந்தை உட்பட 6 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முத்தம் கொடுத்தது தப்பா? மணமகனை தாக்கிய மணமகள் குடும்பம்..உத்தர பிரசேதத்தில் ரணகளம்!

திருமணம்

Follow Us On

மணமகளுக்கு முத்தம் கொடுத்த மணமகன்: திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் விழாவாக கருதப்படுகிறது. இருப்பினும், எத்தனையோ திருமணங்கள் கடைசி நிமிடங்களில் நின்றுபோய்விடுகின்றன. பல்வேறு வினோத காரணங்களுக்காகவும் திருமணங்கள் நிறுத்தப்படுகிற சம்பவங்கள் சமீப காலமாக அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் கடந்த 21ஆம் தேதி நடந்த திருமணத்தின்போது மணமகன், மணமகளுக்கு முத்தம் கொடுத்ததை அடுத்து, திருமணம் போர்க்களத்தில் நின்றிருக்கிறது.

அதாவது, உத்தர பிரதேச மாநிலம் ஹபூரின் அசோக் நகரில் உள்ள திருமண மண்டத்தில் இரண்டு திருமணங்களுக்கு ஏற்பாடு செய்யப்பபட்டிருந்தது. ஹபூரைச் சேர்ந்த நபருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த இரண்டு மகள்களுக்கு ஒரே நாளில், ஒரே மண்டபத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மூத்த மகளுக்கு திருமணம் சுமூகமாக முடிந்தது.

Also Read: காதலுனுடன் சேர்ந்து தந்தையை கொடூரமாக கொன்ற சிறுமி.. பகீர் காரணம்!

கடைசி நிமிடத்தில் நின்ற திருமணம்:

ஆனால், இரண்டாவது மகளின் திருமண ரணகளத்தில் தான் முடித்திருக்கிறது. அதாவது, மணமகள் மற்றும் மணமகள் மேடையில் அமர்ந்துக் கொண்டிருக்கின்றனர். தாலி கட்டுவதற்கு முன்பு சில சடங்குகள் நடந்துக் கொண்டிருந்தது. சடங்குகள் நடந்துக் கொண்டிருக்கும்போது மணமகளுக்கு மணமகன் முத்தம் கொடுத்திருக்கிறார்.

இதனால், ஆத்திரமடைந்த மணமகள் குடும்பத்தினர் சண்டையிட்டுள்ளனர். இதனை அடுத்து, மணமகள் மற்றும் மணமகன் குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் நீடித்த நிலையில், மேடையில் ஏறிய மணமகளின் குடும்பத்தினர் மணமகன் குடும்பத்தினரை கடுமையாக தாக்கி உள்ளனர். இதோடு, இருகுழுவுக்கும் இடையே பயங்கரமான மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதனால், திருமண மண்டமே ரணகளமாக இருந்தது. இந்த தாக்குதலில் மணமகளின் தந்தை உட்பட 6 பேர் காயம் அடைந்தனர்.

ரணகளத்தில் முடிந்த திருமணம்:

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோதலை தடுத்தி நிறுத்தி 7 பேரை கைது செய்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மணமகளுக்கு, மணமகன் வலுக்கட்டாயமாக முத்தமிட்டதாக மணமகளின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

இந்த சம்பவம் தொடர்பாக இரு குடும்பத்தினரிடம் இருந்து எழுத்தப்பூர்வ புகார் எதுவும் வரவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.  இந்திய தண்டனைச் சட்டம் 151வது பிரிவின் கீழ் பொது அமைதிக்கும் பங்கம் விளைவித்ததாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மணமகளுக்கு முத்தம் கொடுத்ததால் கடைசி நிமிடத்தில் திருமணம் நின்று போனது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பாலைவன மணலில் அப்பளம் பொரிக்கும் ராணுவ வீரர்.. வைரலாகும் வீடியோ!

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version