கொல்கத்தா மருத்துவர் படுகொலை.. அடித்து நொறுக்கப்பட்ட மருத்துவமனை.. தடி அடி நடத்திய போலீஸ்!
Sexual Harassment | கொலையாளி சஞ்சய் ராயிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பெண் மருத்துவர் கொலை செய்வதற்கு முன் அவர் மதுபோதையில் இருந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், அவரது செல்போனை ஆய்வு செய்ததில் ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரியவந்தது. எனவே, சஞ்சய் ராய் போதை மயக்கத்தில் ஆபாச படம் பார்த்துவிட்டு மருத்துவமனைக்குள் புகுந்து இரவு நேரத்தில் பணியில் தனியாக இருந்த பெண் மருத்துவரிடன் அத்துமீறி உள்ளார்.
பாலியல் வன்கொடுமை: மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் கடந்த 9ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட பெண் மருத்துவர் அங்கு முதுநிலை மருத்துவப் படிப்பு பயின்று வந்தார். இதனை அடுத்து, கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்குள்ள கேமராவில் பதிவான வீடியோவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சஞ்சய்ராய் (38) என்ற இளைஞர், அந்த பெண் மருத்துவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவரின் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கொல்கத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க : Today’s Top News Headlines: இந்தியாவில் இன்று 78வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.. இன்றைய முக்கியச் செய்திகள்..
அடித்து நொறுக்கப்பட்ட மருத்துவமனை
இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நேற்று இரவு ஆர்.கி.கர் மருத்துவமனை வளாகத்தில் இரவு போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் அடித்து வெளியேற்றினர். அப்போது மருத்துவமனையின் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதேபோல் அசன்சோல் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர், செல்போன் டார்ச் அடித்து முழக்கம் எழுப்பினர். மேலும் சிலிகுரியில், ஆள் உயர தீப்பந்தம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையை கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் 4 பக்க பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்து. அதில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரது மர்ம உறுப்பு மற்றும் அடி வயிறு, இடது கால், வலது கை, கழுத்து, மோதிரவிரல், உதடு மற்றும் முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில் காயங்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண் டாக்டருக்கு நடந்த கொடூரம்:
கைதாக கொலையாளி சஞ்சய் ராயிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பெண் மருத்துவர் கொலை செய்வதற்கு முன் அவர் மதுபோதையில் இருந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், அவரது செல்போனை ஆய்வு செய்ததில் ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரியவந்தது. எனவே, சஞ்சய் ராய் போதை மயக்கத்தில் ஆபாச படம் பார்த்துவிட்டு மருத்துவமனைக்குள் புகுந்து இரவு நேரத்தில் பணியில் தனியாக இருந்த பெண் மருத்துவரிடன் அத்துமீறி உள்ளார்.
இதையும் படிங்க : Independence Day 2024: கருணாநிதி பெற்று தந்த உரிமை.. இன்றைக்கு முதல்வர்கள் கொடியேற்ற காரணம் அவர்தான்!
இதற்கு அந்த பெண் மருத்துவர் மறுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த சஞ்சய் ராய் பெண் மருத்துவரை சரமாரியாக கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்திருக்கிறார். அதன் பின்பு, பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். இதனை அடுத்து, அவர் இரவு முழுவதும் சடலத்திற்கு அருகில் இருந்துள்ளனர். பின்னர், அதிகாலையில் எழுந்து ரத்தக்கறை படிந்த தனது ஆடைகளை கழுவி அங்கு தரையில் படிந்திருந்த ரத்தக்கறையை துடைத்தது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையில் சஞ்சய் ராய் கொலை செய்ததை அவரது தாயார் லலிதா ராய் மறுத்துள்ளார். ஆனால், சஞ்சய் ராயின் மாமியார் இதை உண்மை என்று கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அங்கு அவருக்கு வருகிற 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.