5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: கொல்கத்தாவை நடுங்க வைத்த சம்பவம்.. பெண் டாக்டருக்கு நடந்த கொடூரம்.. திடுக்கிடும் தகவல்கள்!

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் 4 பக்க பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்து. அதில், சில திடுக்கிடும் தகவல்கள் உள்ளன.

Crime: கொல்கத்தாவை நடுங்க வைத்த சம்பவம்.. பெண் டாக்டருக்கு நடந்த கொடூரம்.. திடுக்கிடும் தகவல்கள்!
மாதிரிப்படம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 12 Aug 2024 15:28 PM

பாலியல் வன்கொடுமை: மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் கடந்த 9ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட பெண் மருத்துவர் அங்கு முதுநிலை மருத்துவப் படிப்பு பயின்று வந்தார். இதனை அடுத்து, கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்குள்ள கேமராவில் பதிவான வீடியோவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சஞ்சய்ராய் (38) என்ற இளைஞர் அந்த பெண் மருத்துவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இவரை போலீசார் கைது செய்தனர். இவர் ஒரு சமூக ஆர்வலர் எனவும் தெரிகிறது.

Also Read: புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ.. எப்போது? பயன்பாடுகள் என்ன? முழு விவரம்..

இதற்கிடையை கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் 4 பக்க பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்து. அதில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரது மர்ம உறுப்பு மற்றும் அடி வயிறு, இடது கால், வலது கை, கழுத்து, மோதிரவிரல், உதடு மற்றும் முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில் காயங்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண் டாக்டருக்கு நடந்த கொடூரம்:

மேலும் கைதாக கொலையாளி சஞ்சய் ராயிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பெண் மருத்துவர் கொலை செய்வதற்கு முன் அவர் மதுபோதையில் இருந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், அவரது செல்போனை ஆய்வு செய்ததில் ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரியவந்தது. எனவே, சஞ்சய் ராய் போதை மயக்கத்தில் ஆபாச படம் பார்த்துவிட்டு மருத்துவமனைக்குள் புகுந்து இரவு நேரத்தில் பணியில் தனியாக இருந்த பெண் மருத்துவரிடன் அத்துமீறி உள்ளார்.

இதற்கு அந்த பெண் மருத்துவர் மறுத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த சஞ்சய் ராய் பெண் மருத்துவரை சரமாரியாக கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்திருக்கிறார். அதன் பின்பு, பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். இதனை அடுத்து, அவர் இரவு முழுவதும் சடலத்திற்கு அருகில் இருந்துள்ளனர். பின்னர், அதிகாலையில் எழுந்து ரத்தக்கறை படிந்த தனது ஆடைகளை கழுவி அங்கு தரையில் படிந்திருந்த ரத்தக்கறையை துடைத்தது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளதாக தெரிகிறது.

Also Read: மயில் கறி சமைப்பது எப்படி? வீடியோ போட்ட யூடியுபர் மீது பாய்ந்த நடவடிக்கை..

இதற்கிடையில் சஞ்சய் ராய் கொலை செய்ததை அவரது தாயார் லலிதா ராய் மறுத்துள்ளார். ஆனால், சஞ்சய் ராயின் மாமியார் இதை உண்மை என்று கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அங்கு அவருக்கு வருகிற 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News