Ratan Tata Passed Away : தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்.. அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!
Condolence for Ratan Tata | ரத்தன் டாடா உடல்நல குறைவால் தனது 86வது வயதில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொழிலதிபர்கள் ஆனந்த் மஹிந்திரா, கவுதம் அதானி உள்ளிட்ட முக்கிய நபர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என கோடி கணக்கானவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் பிரபல தொழிலதிபராக திகழ்ந்தவர் ரத்தன் டாடா. இவர் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ஆவார். டாடா கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஐசியுவில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். ரத்தன் டாடா தனது 86வது வயதில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மறைவுக்கு தொழில்திபர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி இரங்கல்
ரத்தன் டாடா தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு தொழிலதிபர். மனிதாபிமானம் மிக்க ஒரு சிறந்த மனிதர் என்று ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Shri Ratan Tata Ji was a visionary business leader, a compassionate soul and an extraordinary human being. He provided stable leadership to one of India’s oldest and most prestigious business houses. At the same time, his contribution went far beyond the boardroom. He endeared… pic.twitter.com/p5NPcpBbBD
— Narendra Modi (@narendramodi) October 9, 2024
ராகுல் காந்தி இரங்கல்
ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ரத்தன் டாடா தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர். அவர் வணிகத்திலும், கொடை உள்ளத்திலும் சிறந்து விளங்கியவர். அவரது குடும்பத்தினருக்கும், அவரை சார்ந்தவர்களுக்கும் என்னுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Ratan Tata was a man with a vision. He has left a lasting mark on both business and philanthropy.
My condolences to his family and the Tata community.
— Rahul Gandhi (@RahulGandhi) October 9, 2024
மம்தா பானர்ஜி இரங்கல்
ரத்தன் டாடாவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு, அவரது குடும்பத்திற்கும், ஊழியர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Saddened by the demise of Ratan Tata, Chairman Emeritus of the Tata Sons.
The former Chairman of Tata Group had been a foremost leader of Indian industries and a public-spirited philanthropist. His demise will be an irreparable loss for Indian business world and society.
My…
— Mamata Banerjee (@MamataOfficial) October 9, 2024
ஆனந்த் மஹிந்திரா இரங்கல்
ரத்தன் டாடாவின் மறைவை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா இரங்கல் தெரிவித்துள்ளார்.
I am unable to accept the absence of Ratan Tata.
India’s economy stands on the cusp of a historic leap forward.
And Ratan’s life and work have had much to do with our being in this position.Hence, his mentorship and guidance at this point in time would have been invaluable.… pic.twitter.com/ujJC2ehTTs
— anand mahindra (@anandmahindra) October 9, 2024
கவுதம் அதானி இரங்கல்
இந்தியா தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு மாபெரும் மனிதரை இழந்துவிட்டதாக அதானி குழும தலைவர் கவுதம் அதானி ரத்தன் டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
India has lost a giant, a visionary who redefined modern India’s path. Ratan Tata wasn’t just a business leader – he embodied the spirit of India with integrity, compassion and an unwavering commitment to the greater good. Legends like him never fade away. Om Shanti 🙏 pic.twitter.com/mANuvwX8wV
— Gautam Adani (@gautam_adani) October 9, 2024
அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மட்டுமன்றி திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்களும் ரத்தான் டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.