6ஆம் கட்ட மக்களவை தேர்தல்… 58 தொகுதிகளில் ஓய்ந்தது பரப்புரை! - Tamil News | | TV9 Tamil

6ஆம் கட்ட மக்களவை தேர்தல்… 58 தொகுதிகளில் ஓய்ந்தது பரப்புரை!

Updated On: 

23 May 2024 18:04 PM

6ஆம் கட்டமாக 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் வரும் 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால், அரசியல் தலைவர்கள் பலரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை ஓய்கிறது. இதனால், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் இன்று ஈடுபடுகின்றனர்.

6ஆம் கட்ட மக்களவை தேர்தல்... 58 தொகுதிகளில் ஓய்ந்தது பரப்புரை!

பிரதமர் மோடி - ராகுல் காந்தி

Follow Us On

6ஆம் கட்ட மக்களவை தேர்தல்:

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிவுக்கு வந்துள்ளன. முதல்கட்டத்தில் 66.14 சதவீதம், 2வது கட்டத்தில் 66.71 சதவீத, 3வது கட்டத்தில் 65.68 சதவீத, 4ஆம் கட்டத்தில் 69.16 சதவீத, 5ஆம் கட்டத்தில் 60.09 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தற்போது வரை 428 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், 6ஆம் கட்டமாக 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் வரும் 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால், அரசியல் தலைவர்கள் பலரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் இன்று ஈடுபட்டனர்.

Also Read: வங்கதேச எம்.பி. கொல்கத்தாவில் படுகொலை? பரபர பின்னணி!

எந்தெந்த தொகுதிகள்?

பீகாரில் 8 தொகுதிகள், ஹரியானாவில் 10 தொகுதிக்ள, ஜம்மு காஷ்மீரில் 1 தொகுதி, ஜார்கண்டில் 4 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள் என மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்து. ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடப்பதால், அங்கு 43 சட்டமன்ற தொகுதியில் வரும் 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக் ரஜோதி தொகுதியில் 3ஆம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கண்ட 58 தொகுதிகளில், 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களுடன் அனந்த்நாக் ராஜோரி தொகுதியைச் சேர்ந்த 20 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

ஸ்டார் வேட்பாளர்கள்:

டெல்லி மக்களவை தொகுதியில் மறைந்த மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சூரி ஸ்வராஜ் பாஜக வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். அவரை எதிர்த்து இந்திய கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி மூத்த தலைவர்  சோம்நாத் பார்தியும், வடகிழக்கு டெல்லியில் பாஜக மூத்த தலைவர் மனோஜ் திவாரி எம்.பி. மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார்.  பீகாரைச் சேர்ந்த அவரை எதிர்கொள்ள காங்கிரஸ் சார்பில் கன்னையா குமார்  களம் காண்கின்றார்.  உத்தர பிரதேச மாநிலத்தில் கல்தான்பூரில் பாஜக சார்பில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் மேனகா காந்தி, ஜம்மு காஷ்மீரின் அனந்த்ராக் ரஜோரியில் முன்னாள் முதல்வர் கெமபூபா முப்தி, மேற்கு வங்கத்தில் தம்லுக்கில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் (பாஜக), ஹரியானாவின் கர்ணாலில் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் (பாஜக), குருஷேத்ராவில் தொழிலதிபர் நவீன் ஜிண்டால் (பாஜக),  ஒடிசாவில் பூரியில் பாஜகவின் சம்பித் பத்ரா, சம்பல்பூரில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் 6ஆம் கட்ட தேர்தலில் முக்கிய வேட்பாளராக களம் இறங்கி உள்ளனர்.

Also Read: “நான் மனிதப் பிறவியே அல்ல.. இந்த பூமிக்கு என்னை அனுப்பியது கடவுள்தான்” பிரதமர் மோடி பேச்சு

உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
Exit mobile version