Viral Video: உஜ்ஜைனியில் பட்டப்பகலில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர்.. சுற்றி நின்று வீடியோ எடுத்த கொடூரம்.. - Tamil News | Madhya pradesh ujjain a girl sexually abused in a busy road none came for help this video has become viral know more in Tamil | TV9 Tamil

Viral Video: உஜ்ஜைனியில் பட்டப்பகலில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர்.. சுற்றி நின்று வீடியோ எடுத்த கொடூரம்..

Published: 

06 Sep 2024 18:39 PM

குற்றம் சாட்டப்பட்டவர் அந்த பெண்ணை மது அருந்த வைத்து தனது காமத்திற்கு பலியாக்கினார். சாலையில் பகிரங்கமாக நடக்கும் இதுபோன்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோ வெளியானதையடுத்து, மத்திய பிரதேச பாஜக அரசை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக சாடி வருகிறது.

Viral Video: உஜ்ஜைனியில் பட்டப்பகலில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர்.. சுற்றி நின்று வீடியோ எடுத்த கொடூரம்..

கோப்பு புகைப்படம்

Follow Us On

மத்திய பிரதேசம்: மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் இருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், பட்டப்பகலில், சாலையில் ஒரு பெண்ணை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் அந்த பெண்ணை மது அருந்த வைத்து தனது காமத்திற்கு பலியாக்கினார். சாலையில் பகிரங்கமாக நடக்கும் இதுபோன்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோ வெளியானதையடுத்து, மத்திய பிரதேச பாஜக அரசை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக சாடி வருகிறது. அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்யும் போது அவரை யாரும் தடுக்காமல் சுற்றியிருப்பவர்கள் வேடிக்கை பார்த்ததும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதனை காட்சிப்படுத்திய நபர் அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதை தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக கோட்வாலி பகுதியின் நகர காவல் கண்காணிப்பாளர் (CSP) ஓம் பிரகாஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட கோகேஷ் அந்த பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி அவரை மது அருந்த செய்துள்ளார். பின்னர் பட்டப்பகலில் சாலையில் நேற்று முன் தினம் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஆனால் அந்த சம்பவத்தை யாரும் கண்டிக்காமல் கடந்து சென்றதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

Also Read: வருமான வரி Refund Request எப்படி அனுப்பனும்னு தெரியுமா?.. இத படிங்க!

லோகேஷ் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பின் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். இதனால் அந்த பெண் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தார். புகாரில் அடிப்படையில் காவல் துறையினர் லோகேஷை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்த கொடூரமான சம்பவத்தின் வீடியோ வைரலான உடனேயே, காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி பாஜக தலைமையிலான மாநில அரசாங்கத்தை தாக்கி, இந்த சம்பவம் உஜ்ஜயினியில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக முடிவுக்கு வருவதை சுட்டிக்காட்டுகிறது என்று குற்றம் சாட்டினார். இது தொடர்பான அவரது பதிவில், “ உஜ்ஜயினி மீண்டும் ஒருமுறை களங்கப்படுத்தப்பட்டுள்ளது! இம்முறையும் உஜ்ஜயினியின் சட்டம் ஒழுங்கு நெற்றியில் கரும்புள்ளி போடப்பட்டுள்ளது. இப்போது உஜ்ஜயினியில் பலாத்காரங்கள் பட்டப்பகலில், திறந்த வெளியில் நடக்க ஆரம்பித்திருப்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. சட்டம் மற்றும் அரசாங்கத்தின் விளைவு முற்றிலும் முடிவுக்கு வரும்போது மட்டுமே இது சாத்தியமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version