5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கணவனின் மூன்றாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்த மனைவிகள்.. ஆந்திராவில் விநோத திருமணம்!

Viral Marriage | விசாகப்பட்டினத்தில் கணவனின் மூன்றாவது திருமணத்துக்கு முதல் இரண்டு மனைவிகள் ஏற்பாடு செய்த சம்பவம் நடந்துள்ளது. அந்திராவின் ஒரு சிறிய கிராமத்தில் தான் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. கடந்த ஜூன் 25 ஆம் தேதி நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கணவனின் மூன்றாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்த மனைவிகள்.. ஆந்திராவில் விநோத திருமணம்!
3வது மனைவியுடப் பாண்டன்னா
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 02 Jul 2024 17:35 PM

3வது திருமணம் : விசாகப்பட்டினம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தின் பழங்குடியினர் கிராமத்தில் ஒரு விசித்திரமான திருமணம் நடைபெற்றுள்ளது. அதாவது மூன்றாவதாக திருமணம் செய்யும் கணவனுக்கு முதல் இரண்டு மனைவிகள் இணைந்து திருமண ஏற்பாடுகளை செய்த அரிய நிகழ்வுதான் அது. ஆந்திராவின் ஒரு குக்கிராமத்தில் கடந்த ஜூன் 25 ஆம் தேதி நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தகவலின் படி, மணமகன் பெடபயலு மண்டலத்திற்கு உட்பட்ட கிஞ்சூரு கிராமத்தை சேர்ந்த எஸ்.பாண்டன்னா என்பது தெரியவந்துள்ளது. இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு சாகேனி பர்வதம்மா என்ற பெண்ணை முதல் முறையாக திருமணம் செய்தார். ஆனால் இந்த தம்பதிக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதை மறைக்காமல் கடந்த 2005 ஆம் ஆண்டு சகேனி அப்பலாம்மா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார்.

கணவனின் மூன்றாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்த மனைவிகள் 

இந்நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது. தனது இரண்டு மனைவிகள் மற்றும் ஆண் குழந்தையுடன் பாண்டன்னா ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். பின்னர் இரண்டாவது மனைவிக்கு வேறு குழந்தை பிறக்காததால் மேலும் குழந்தைகளை பெற்றுக்கொள்ள மூன்றாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார் பாண்டன்னா. இரண்டு திருமணங்கள் செய்துக்கொள்வதே அரிதாக உள்ள சூழலில் பாண்டன்னா மூன்றாவது திருமணம் செய்த்துக்கொள்ள விரும்பியுள்ளார். இது குறித்து பாண்டன்னா தனது மனைவிகளிடம் கூற அவர்களே கணவனின் மூன்றாவது திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். திருமணத்திற்கு அழைப்பிதழ் தயாரிப்பது முதல் போஸ்டர் ஒட்டுவது வரை என அனைத்து திருமண ஏற்பாடுகளையும் இருவரும் முன் நின்று செய்துள்ளனர்.

மூன்றாவது திருமணம் செய்த பாண்டன்னா

திட்டமிட்டபடி ஜூன் 25 ஆம் தேது பாண்டன்னா லஷ்மி என்று அழைக்கப்படும் மேரி லாவன்யா என்ற பெண்ணை மூன்றாவது முறையாக திருமணம் செய்துக்கொண்டார். பாண்டன்னா தனது மூன்று மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசிப்பார் என கிராம வாசிகள் தெரிவித்தனர். ஆனால் பாண்டன்னா திருமணம் முடித்த கையுடன் மூன்று மனைவிகள் மற்றும் மகனுடன் வேறு ஒரு ஊருக்கு சென்று வசிக்க தொடங்கவிட்டார். இந்தியாவில் உள்ள சில பழங்குடியின பகுதிகளில் ஆண்களுக்கு இரண்டு மனைவிகள் இருப்பது வழக்கம் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் ஒரு மனிதன் மூன்றாவது முறையாக திருமணம் செய்துக்கொள்வது அவர்களுக்கு அரிதாகவே தோன்றியுள்ளது. அதுமட்டுமன்றி கணவனின் மூன்றாவது திருமணத்துக்கு அவரது மனைவிகளே ஏற்பாடுகளை செய்தது சற்று வியப்பாக தான் உள்ளது.