Uttar Pradesh : ஐபோனுக்காக நடந்த கொலை.. டெலிவரி பாய்க்கு நடந்த கொடுமை.. குற்றம் நடந்தது எப்படி?
Delivery Boy | உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவை சேர்ந்தவர் பரத் சாஹு என்ற 35 வயது இளைஞர். இவர் பிரபல இ காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்டில் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். அவர் 2 நாட்களுக்கு மேல் ஆகியும் வீட்டிற்கு வராத நிலையில் பதறிப்போன அவரது பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐபோன் 16 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஸ்மார்ட்போன் சீரீஸ் அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதலே விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ஐபோன் 16 விற்பனை தொடங்கிய அன்று, ஆப்பிள் ஸ்டோர்களின் வெளியே மக்கள் கூட்டம் அலைமோதியது. வரிசையில் வெகு நேரம் நின்று ஐபோன் வாங்குவதை தவிர்க்கும் வகையில் மிக குறைந்த நேரத்தில் பல இ காமர்ஸ் நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களை டெலிவரி செய்து வந்தன. இந்த நிலையில், லக்னோவில் பிளிப்கார்ட் இ காமர்ஸ் தளத்தில் ஐபோன் ஆர்டர் செய்த நபர், அதை டெலிவரி செய்த நபரை கொடூரமாக கொலை செய்து ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : Samantha : சமந்தா விவாகரத்து குறித்து அமைச்சர் கிளப்பிய சர்ச்சை.. கொதிக்கும் ஆந்திரா.. என்ன நடந்தது?
திடீரென காணாமல் போன டெலிவரி பாய் – பெற்றோர் புகார்!
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவை சேர்ந்தவர் பரத் சாஹு என்ற 35 வயது இளைஞர். இவர் பிரபல இ காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்டில் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். அவர் 2 நாட்களுக்கு மேல் ஆகியும் வீட்டிற்கு வராத நிலையில் பதறிப்போன அவரது பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெற்றோரின் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அப்போது தான் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : Seeman: நா.த.க., நிர்வாகிகள் விலகல்.. எந்த பிரச்னையும் இல்லை என கூலாக சொன்ன சீமான்!
போலீசார் விசாரணையில் வெளியான பகீர் சம்பவம்
லக்னோவை சேர்ந்த 2 இளைஞர்கள் பிளிப்கார்டில் சுமார் ரூ.1,50,000 மதிப்பிலான ஐபோனை ஆர்டர் செய்துள்ளனர். ஐபோனை ஆர்டர் செய்த அந்த இளைஞர்கள் அதற்கு பணம் செலுத்தாமல், டெலிவரியின் போது பணம் செலுத்திக்கொள்ளும் COD ஆப்ஷனை தேர்வு செய்துள்ளனர். இளைஞர்கள் ஆர்டர் செய்த ஸ்மார்ட்போனை டெலிவரி செய்யும்படி பரத் சாஹுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் ஐபோனை டெலிவரி செய்ய சென்றுள்ளார். அப்போது அந்த 2 இளைஞர்களும் இணைந்து சாஹூவை கொலை செய்து இந்திரா கால்வாயில் வீசியுள்ளனர்.
இதையும் படிங்க : iPhone Diwali Sale : ஸ்மார்ட்போன்கள் முதல் மேக் புக் வரை.. தீபாவளியை முன்னிட்டு அதிரடி சலுகைகளை வழங்கும் ஆப்பிள்!
போலீசாரின் விசாரணையில் உண்மையை சொன்ன இளைஞர்
இந்த நிலையில் மகனை காணாமல் தவித்த பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து அவர்கள் அளித்த தகவலின்படி, ஐபோன் ஆர்டர் செய்த 2 இளைஞர்களில் ஒருவரான கஞ்சன் என்பவரின் மொபைல் எண் கிடைத்துள்ளது. அதனை வைத்து ஆகாஷை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஆகாஷ் நடந்த சம்பவத்தை காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : Viral Video : பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவர்கள்.. பள்ளிக்கு வெளியே அமர வைத்த நிர்வாகம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இளைஞரின் உடலை தேடும் மீட்பு படை
இதனை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சாஹுவின் உடலை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். ரூ.1,50,000 லட்சம் மதிப்பிலான ஐபோனுக்காக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட சம்பவ பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.