Crime: ”இந்த சாப்பாடு நான் கேட்கல” பிடித்த உணவை சமைக்காததால் ஆத்திரம்.. லின் இன் உறவில் இருந்த பெண்ணை கொடூரமாக கொன்ற காதலன்! - Tamil News | mother 2 killed by boyfriend over not cooking his favourite food in uttarpradesh in tamil | TV9 Tamil

Crime: ”இந்த சாப்பாடு நான் கேட்கல” பிடித்த உணவை சமைக்காததால் ஆத்திரம்.. லின் இன் உறவில் இருந்த பெண்ணை கொடூரமாக கொன்ற காதலன்!

Published: 

25 Aug 2024 08:18 AM

உத்தர பிரதேசத்தில் பிடித்த உணவை சமைக்காத ஆத்திரத்தில் லிவ் இன் உறவில் இருந்த பெண்ணை காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு இந்த உணவு பிடிக்கவில்லை எனவும் இதனால் வேறு உணவை சமைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதற்கு மறுத்த காதலி சப்னாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Crime: ”இந்த சாப்பாடு நான் கேட்கல பிடித்த உணவை சமைக்காததால் ஆத்திரம்.. லின் இன் உறவில் இருந்த பெண்ணை கொடூரமாக கொன்ற காதலன்!

மாதிரிப்படம்

Follow Us On

பெண்ணை கொன்ற காதலன்: உத்தர பிரதேசத்தில் பிடித்த உணவை சமைக்காத ஆத்திரத்தில் லிவ் இன் உறவில் இருந்த பெண்ணை காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் பெண்களுக்கு எதிராகவும், குழந்தைகளுக்கு எதிராகவும் நடத்தப்படும் குற்றச் செயல்கள் பெரும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. பெரும்பாலான நேரங்களில் தெரிந்த நபர்கள் அல்லது உறவினர்களே இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக ஐ.நா. கூறியிருக்கிறது. குறிப்பாக லிவ் இன உறவில் அதிக கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் பிடித்த உணவை சமைக்காத ஆத்திரத்தில் லிவ் இன் உறவில் இருந்த பெண்ணை காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜய் ரைதாஸ். இவரது காதலி சப்னா ரைக்வார். இவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை வருடமாக வித்யா நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

Also Read: மனைவி, 5 வயது குழந்தை கழுத்தறுத்து கொலை… கணவன் விபரீத முடிவு.. பகீர் காரணம்!

இந்த நிலையில், சம்பவத்தன்று பெண் சப்னா சாப்பிட சொல்லி கூறியிருக்கிறார். அப்போது சாப்பிட வந்த விஜய் ரைதாஸ், தனக்கு இந்த உணவு பிடிக்கவில்லை எனவும் இதனால் வேறு உணவை சமைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதற்கு மறுத்த காதலி சப்னாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பிடித்த உணவை சமைக்காததால் ஆத்திரம்:

வாக்குவாதம் நீடித்த நிலையில், ஆத்திரத்தில் பெண் சப்னாவை அடித்தே கொலை செய்திருக்கிறார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது பெண் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விஜய் ரைதாஸை கைது செய்தனர். விசாரணையில், இறந்த பெண் சப்னா ரைக்வார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ரூப்லால் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார்.

Also Read: மோசமான ஒருதலைக் காதல்.. இளம்பெண் கொடூர கொலை.. கட்டிடத்திற்குள் உடல் புதைப்பு.. பகீர் பின்னணி!

இந்த திருமணத்தில் அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இருப்பினும், சப்னா தனது ரூப்லாலை விட்டு பிரிந்து, விஜய் ரைதாஸ் உடன் லிவ் இன் உறவில் இருந்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பிடித்த உணவை சமைக்காததால் லிவ் இன் உறவில் இருந்த பெண்ணை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version