5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Mumbai Crime: அதிர்ந்த மும்பை.. இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற காதலன்.. பகீர் காரணம்!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவி மும்பை உரான் ரயில் நிலையம் அருகே இளம்பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக அதிகாலை 4 மணியளவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Mumbai Crime: அதிர்ந்த மும்பை.. இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற காதலன்.. பகீர் காரணம்!
மாதிரிப்படம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 27 Jul 2024 19:48 PM

இளம்பெண் கொலை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகையை குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. மும்பை ரயில் நிலையத்தில் இளம்பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Also Read: விடுதிக்குள் புகுந்து இளம்பெண் கொடூரமாக குத்திக்கொலை.. பெங்களூருவை அதிர வைத்த கிரைம்!

நவி மும்பை உரான் ரயில் நிலையம் அருகே இளம்பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக அதிகாலை 4 மணியளவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, இளம்பெண் கத்தியால் கொலை செய்யயப்பட்டு புதரில் தூக்கி வீசியது தெரியவந்துள்ளது. அந்த பெண் 20 வயதான யஷாஸ்ரீ ஷிண்டே என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் ஊரான் பகுதியைச் சேர்ந்தவர்.

காதலன் வெறிச்செயல்:

இவர் பேலாபூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று அவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிகிறது. இதற்கிடையில், போலீசாருக்கு இளம்பெண் சடலம் கிடப்பதாக தகவல் வந்ததை அடுத்து, காணாமல் போன யஷாஸ்ரீ ஷிண்டே என்று தெரியவந்துள்ளது.

மேலும், இந்த பெண்ணை அவரது காதலன் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவருக்கு சண்டை ஏற்பட்டதாகவும், இந்த தகராறில்  இந்த பெண்ணை அவரது காதலன் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, இளம்பெண்ணை கொலை செய்த நபர் யார்? எந்த நோக்கத்திற்காக கொலை செய்தார்? என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இளம்பெண்ணை கொலை செய்த நபரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ”மைக் ஆஃப்.. 5 நிமிடம் கூட பேச விடவில்லை” நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து கோபமாக வெளியேறிய மம்தா!

Latest News