இஸ்லாமியரால் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க முடியாதா? நீதிமன்றம் பரபர கருத்து! - Tamil News | | TV9 Tamil

இஸ்லாமியரால் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க முடியாதா? நீதிமன்றம் பரபர கருத்து!

Updated On: 

09 May 2024 15:39 PM

திருமணமான இஸ்லாமியர் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க முடியாது என்று அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமியரால் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க முடியாதா? நீதிமன்றம் பரபர கருத்து!

அலகாபாத் நீதிமன்றம்

Follow Us On

அலகாபாத் நீதிமன்றம் பரபர தீர்ப்பு:

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் முஹம்மது சதாப் கான். இவர் சினேகா தேவி என்ற பெண்ணுடன் லின் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார். இதனால், சினேகாதேவியின் பெற்றோர் எங்களது மகளைக் கடத்தி, திருமண செய்துக் கொள்ள முஹம்மது சதாப் கான் கட்டாயப்படுத்துவதாக அவர் மீது புகார் அளித்தனர்.

இதனை அடுத்து, முஹம்மது சதாப் கானும், சினேகா தேவி இருவரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுதாக்கல் செய்தனர். சட்டப்பிரிவு 21 உயிர் மற்றும் தனிப்பட்ட சுதந்திர பாதுகாப்பு கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ”நாங்கள் இருவரும் மைனர்.

எனவே, உச்ச நீதிமன்றத்தின்படி, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் சேர்ந்து வாழ சுதந்திரம் இருப்பதாகவும், தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கு அலகாபாத் நீதிபதிகள் ஏ.ஆர்.மசூதி, ஏ.கே. ஸ்ரீவஸ்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடத்தது. விசாரணையின் முடிவில், “2020ல் முஹம்மது சதாப் கான் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்பதை நீதிமன்றம் அறிந்து கொண்டது.

Also Read : “அதானி, அம்பானி வீட்டுக்கு ED அனுப்புங்கள்” ராகுல் காந்தி பதிலடி!

“திருமணமான இஸ்லாமியர் லிவ் இன் உறவில் இருக்க முடியாது”

இஸ்லாமியர் வாழ்கைத் துணையுடன் வாழும்போது மற்றொருவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க உரிமை கோர முடியாது. இந்த உறவு முறைகள் இஸ்லாம் கொள்கையின்படி அனுமதிக்கப்படாது.

திருமண விஷயத்தில் அரசியலமைப்பு ஒழுக்கமும், சமூக ஒழுக்கமும் சமநிலையில் இருக்க வேண்டும். தவறினால், சமூகத்தில் அமைதி, சமூக ஒற்றுமை மங்கி மறைந்துவிடும்.

சட்டப்பிரிவு 21-ன் படி, திருமண உறவில் ஒழுக்கத்துடன் வாழும் தம்பதியினரை காப்பாற்றும். இந்திய அரசியலமைப்பு 21வது பிரிவு திருமண மீறிய உறவுக்காக எந்த பாதுகாப்பு வழங்காது.

ஒருவேளை இருவரும் திருமணமாகாதவர்கள் இருந்தால், தங்கள் விருப்பப்படி வாழ்க்கையை நடத்துவதைத் தேர்வு இச்சட்டம் வழிவகுக்கும். இந்த வழக்கின் தீர்ப்பும் மாறுப்படும். எனவே, சினேகா தேவியை அவரது பெற்றோருடன் பாதுகாப்புடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது” என்றனர்.

Also Read : கொளுத்திப்போட்டட சாம் பிட்ரோடா! “காங்கிரஸ் கூட்டணியை முறிக்க ஸ்டாலின் தயாரா?” பிரதமர் மோடி கேள்வி

Related Stories
“பெருமாள் பெயரில் அரசியல் நடக்குது” திருப்பதி லட்டு குறித்து ஜெகன் மோகன் காட்டம்!
Tirupati Laddu Controversy: “மாட்டு கொழுப்பு..” லட்டு விற்பனை மூலம் திருப்பதி கோயிலுக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு தெரியுமா?
Tirupati Laddoo : திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய்.. வலுக்கும் கண்டனம்.. இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி!
Tirupati Laddu: ”மாட்டு கொழுப்பு.. மீன் எண்ணெய்” திருப்பதி லட்டு குறித்து ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
கனடா செல்ல பிளானா? இந்திய மாணவர்களுக்கு புது சிக்கல்.. கஷ்டம் தான் ரொம்ப!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பா? பகீர் கிளப்பிய சந்திரபாபு நாயுடு.. என்ன நடக்கிறது?
உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
Exit mobile version