Harassment : கூட்டு பாலியல் வன்கொடுமை.. மருத்துவரின் ஆணுறுப்பை அறுத்த செவிலியர்! - Tamil News | Nurse cut off doctor's private part to protect her from harassment in Bihar | TV9 Tamil

Harassment : கூட்டு பாலியல் வன்கொடுமை.. மருத்துவரின் ஆணுறுப்பை அறுத்த செவிலியர்!

Published: 

15 Sep 2024 17:40 PM

Bihar Issue | நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் தான் தற்போது நிலவி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கொல்கத்தாவின் பயிற்சி பெண் மருத்துவர் மருத்துவமனையிலே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

Harassment : கூட்டு பாலியல் வன்கொடுமை.. மருத்துவரின் ஆணுறுப்பை அறுத்த செவிலியர்!

மாதிரி புகைப்படம் (Photo Credit : coldsnowstorm/E+/Getty Images)

Follow Us On

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருத்துவர்கள் : பீகாரில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருத்துவரின் ஆண் உறுப்பை செய்விலியர் அறுத்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. செவிலியரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்த பெகுசராய் மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய் குமார், வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த சுனில் குமார் குப்தா மற்றும் மங்க்ரா பகுதியை சேர்ந்த அவதேஷ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க : முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் அரவிந்த் கெஜ்ரிவால்.. உச்சக்கட்ட அரசியல் பரபரப்பு..

கூட்டு பாலியல் வன்கொடுமை முயற்சி – மருத்துவரின் ஆணுறுப்பை அறுத்த செவிலியர்

பீகாரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு தலைக்கேறிய போதையில் சுற்றித்திரிந்த மருத்துவர்கள் 3 பேர், அங்குள்ள சுகாதார மையத்தில் பணிபுரிந்துக்கொண்டிருந்த செவிலியரிடம் தவறாக நடத்துக்கொண்டுள்ளனர். அப்போது சஞ்சய் குமார் என்று மருத்துவர் அந்த செய்விலியரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த செய்விலியர் அருகில் இருந்த சர்ஜிக்கல் பிளேடை எடுத்து அந்த மருத்துவரின் ஆணுறுப்பை அறுத்துள்ளார். பிறகு அந்த இடத்தில் இருந்து தப்பித்துச் சென்ற செவிலியர், அருகில் இருந்த விளை நிலத்திற்கு சென்று மறைந்துக்கொண்டுள்ளார். பிறகு இந்த சம்பவம் குறித்து அவர் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க : Thirumavalavan : அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பது தான் ஜனநாயகம்.. செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன்!

காவல்துறை வரும் வரை விளை நிளத்தில் மறைந்துக்கொண்டிருந்த செவிலியர்

செவிலியரின் புகாரின் அடிப்படையில் மருத்துவமனைக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் ஆணுறுப்பு அறுக்கப்பட்ட மருத்துவருக்கு அந்த மருத்துவமனையிலே காவல் துறையினர் சிகச்சை பெற செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  செயவிலியரின் தகவலின் அடிப்படையில் 3 மருத்துவர்களை கைது செய்த காவல்துறையினர், அருகில் இருந்த விளை நிளத்தில் மறைந்துக்கொண்டிருந்த செவிலியரை பத்திரமாக மீட்டனர்.

தற்காப்புக்காக மருத்துவரின் ஆணுறுப்பை அறுத்தேன் – செவிலியர்

இந்த விவகாரம் குறித்து செவிலியரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பேசிய அவர், தான் அந்த மருத்துவமனையில் கடந்த 15 மாதங்களாக பணியாற்றி வருவதாகவும், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதால் தற்காப்புக்காக பிளேடால் மருத்துவரின் ஆணுறுப்பை அறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : Vijay Wishes | அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்தவர் அண்ணா.. விஜய் புகழாரம்!

டிசேபிள் செய்யப்பட்ட சிசிடிவி கேமரா

இந்த விவகாரம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் ரத்த கரை படிந்த பெட் ஷீட்டுகள், மது பாட்டில்களை மருத்துவமனையில் இருந்து கைப்பற்றியுள்ளனர். அதுமட்டுமன்றி மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா டிசேபிள் செய்யப்பட்டிருந்ததையும் போலீசார் தங்கள் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் தான் தற்போது நிலவி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கொல்கத்தாவின் பயிற்சி பெண் மருத்துவர் மருத்துவமனையிலே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மருத்துவரின் கொலையை அடுத்து வெளியான உடற்கூறாய்வு முடிவுகள் நாட்டையே நடுநடுங்க செய்தது. காரணம், அவ்வளவு கொடூரமான முறையில் அந்த மருத்துவர் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் பூதாகரமாக வெடித்த நிலையில் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினர். மருத்துவருக்கு உடனடி நீதி கிடைக்க வேண்டும் என்று இன்றும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க : Viral Video : பாதுகாப்பின் உச்சம்.. மகளின் தலையில் சிசிடிவி கேரமா பொருத்திய தந்தை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

மருத்துவர் மட்டுமன்றி பணி முடிந்து வீடு திரும்பிய செவிலியர், பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவி என கடந்த சில மாதங்களில் பெண்களுக்கு எதிரான பல்வேறு  பாலியல் குற்றங்கள் அரங்கேறியுள்ளன. மருத்துவமனை முதல் பள்ளி, கல்லூரிகள் வரை பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலே நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
Exit mobile version