5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Priyanka Gandhi Wayanad: வயநாட்டில் பிரியங்கா காந்தி.. தேர்தல் அரசியலில் சாதிப்பாரா?

வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்தார். அதுமட்டுமின்றி, ராகுல் காந்தியின் இளைய சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர்களின் ஒருவரான பிரியங்கா காந்தி கேரளாவின் வயநாட்டில் இருந்து போட்டியிடுவார் எனவும் அறிவித்தார். இதன் மூலம் பிரியங்கா காந்தி வயநாடு மூலம் தேர்தல் அரசியலில் என்டரி கொடுக்க உள்ளார். இதுகுறித்து பேசிய பிரியங்கா காந்தி, "வயநாடு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ராகுல் காந்தி இல்லாததை உங்களுக்கு உணர விடமாட்டேன். நான் கடினமாக உழைத்து அனைவரையும் மகிழ்வித்து நல்ல பிரதிநிதியாக இருக்க என்னால் முடிந்தவரை செய்வேன்” என்றார்.

Priyanka Gandhi Wayanad: வயநாட்டில் பிரியங்கா காந்தி.. தேர்தல் அரசியலில் சாதிப்பாரா?
பிரியங்க காந்தி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 18 Jun 2024 06:38 AM

வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டையும் கைப்பற்றினார். உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் 3.90 லட்ச வாக்குகள் வித்தியாசத்திலும், வயநாடு தொகுதியில் 3.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். அரசியலைப்பின்படி, ஒருவரால் இரண்டு தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் எம்.பியாக இருக்க முடியாது. எனவே, எதாவது ஒரு தொகுதியில் எம்.பி.பதவியை அவர் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. எந்த தொகுதியை ராஜினாமா செய்ய உள்ளார் என்பது பல நாட்களாக கேள்வியாக இருந்தது. இந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்தார்.

Also Read: வயநாட்டில் களமிறங்கும் பிரியங்கா.. ரேபரேலி எம்பியாக தொடரும் ராகுல் காந்தி!

”ராகுல் இல்லாத வெறுமையை உணர விடமாட்டேன்”

அதுமட்டுமின்றி, ராகுல் காந்தியின் இளைய சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர்களின் ஒருவரான பிரியங்கா காந்தி கேரளாவின் வயநாட்டில் இருந்து போட்டியிடுவார் எனவும் அறிவித்தார். இதன் மூலம் பிரியங்கா காந்தி வயநாடு மூலம் தேர்தல் அரசியலில் என்டரி கொடுக்க உள்ளார். இதுகுறித்து பேசிய பிரியங்கா காந்தி, “வயநாடு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ராகுல் காந்தி இல்லாததை உங்களுக்கு உணர விடமாட்டேன். நான் கடினமாக உழைத்து அனைவரையும் மகிழ்வித்து நல்ல பிரதிநிதியாக இருக்க என்னால் முடிந்தவரை செய்வேன். ரேபரேலி மற்றும் அமேதி உடனான உறவை முறிக்க முடியாது. ரேபரேலி மற்றும் வயநாட்டில் நாங்கள் இருவரும் இருப்போம்” என்றார்.

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்வது குறித்து பேசிய ராகுல் காந்தி, “ரேபரேலி மற்றும் வயநாடுடன் எனக்கு உணர்வுப்பூர்வமான தொடர்பு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு எம்.பி.யாக இருந்தேன். மக்களிடம் இருந்து பெற்ற அன்புக்கு நன்றி.

பிரியங்கா வயநாட்டில் போட்டியிடுவார். ஆனால் நானும் அடிக்கடி வயநாட்டிற்கு செல்வேன். வயநாடு மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். ரேபரேலியுடன் எனக்கு பழைய உறவு உள்ளது. அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் அது கடினமான முடிவு. வயநாடு மக்கள் என்னுடன் நின்று எனக்கு ஆதரவளித்தனர். அவர்களின் கடினமான நேரத்தில் நான் போராடுவேன்.

வயநாட்டு மக்கள் தங்களுக்கு 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக நினைக்கலாம். ஒருவர் எனது சகோதரி, மற்றவர் நான். என் கதவுகள் வயநாட்டு மக்களுக்காக எப்போதும் திறந்திருக்கும். வயநாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் நான் நேசிக்கிறேன். ராகுல் இல்லாததை வயநாடு மக்கள் உணர விடமாட்டோம்” என்றார்.

Also Read: மேற்குவங்க ரயில் விபத்துக்கு காரணம்.. சிக்னல் கோளாறா? மனித தவறா? பரபர தகவல்!

 

Latest News