5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

”நல்ல ஸ்டாண்ட் அப் காமெடி” ராகுல் காந்தி பேச்சு குறித்து கங்கனா ரணாவத் விமர்சனம்!

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி முதல் முறையாக நேற்று உரையாற்றினார். அவரது 100 நிமிட பேச்சில் அடுக்கடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கேள்விகளை எழுப்பியதால் அவையில் அனல் பறந்தது. இந்த நிலையில், அவையில் ராகுல் காந்தியின் பேச்சு குறித்து எம்.பி. கங்கனா ரணாவத் விமர்சித்துள்ளார்.

”நல்ல ஸ்டாண்ட் அப் காமெடி” ராகுல் காந்தி பேச்சு குறித்து கங்கனா ரணாவத் விமர்சனம்!
ராகுல் காந்தி – கங்கனா ரணாவத்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 02 Jul 2024 07:40 AM

”நல்ல ஸ்டாண்ட் அப் காமெடி” மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி முதல் முறையாக நேற்று உரையாற்றினார். அவரது 100 நிமிட பேச்சில் அடுக்கடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கேள்விகளை எழுப்பியதால் அவையில் அனல் பறந்தது. இந்த நிலையில், அவையில் ராகுல் காந்தியின் பேச்சு குறித்து எம்.பி. கங்கனா ரணாவத் விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரணாவத், “மக்களவையில் ராகுல் காந்தி செய்தது ஒரு நல்ல ஸ்டாண்ட் அப் காமெடி. காரணம் அவர் எல்லா கடவுள்களையும் காங்கிரஸ் கட்சியின் பிராண்ட் அம்பாசிடராக ஆக்கிவிட்டார்.

சிவனின் கைகள், காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் என கூறுகிறார். இஸ்லாமியர்களுக்காக உயர்த்தப்படும் கைகள் காங்கிரஸின் கை என்று சொல்லுகிறார். இவையெல்லாம் அவரின் பேச்சுகள். இவரது பேச்சுக்கு நாங்கள் சிரித்துக் கொண்டிருந்தோம். ராகுல் காந்தியின் முக்கிய புகார் அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்தவில்லை என்பது தான். இதில் இருந்தே நீங்கள் புரிந்து கொள்ளலாம் இது ஒரு ஸ்டாண்டப் காமெடி.

Also Read: அமலுக்கு வந்த 3 புதிய குற்றவியல் சட்டம்.. வியாபாரி மீது பாய்ந்தது முதல் வழக்கு!

கடவுளின் படங்களைக் கூட கொண்டு வந்து மேசையில் வைத்தார், அது எப்போதும் கோயிலுக்குள் வைக்கப்பட வேண்டும் . அவர் இந்து கடவுள்களை அவமதித்தார்.. இந்து மதத்தை பின்பற்றுபவர்களையும் கூட அவமதித்தார். வன்முறையாளர்கள் என்றும் கூட சொன்னார். எனவே, தன்னுடைa பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

ராகுல் காந்தி பேசியது என்ன?

மக்களவையில் நேற்று பேசிய ராகுல் காந்தி, “எதிர்க்கட்சியாக இருப்பதில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் நான் உணர்கிறேன் . எங்களை பொறுத்தவரை அதிகாரத்தை விட உண்மைதான் மிகவும் சக்தி வாய்ந்தது. எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்லை. ஆனால், உங்களுக்கு அப்படி இல்லை. உங்களுக்கு அதிகாரம் மட்டுமே முக்கியம். அதுதான் நிதர்சனமான உண்மை. பயத்தை எதிர்கொள்வதும் ஒருபோதும் பயப்படக்கூடாது என்ற எண்ணமும் சிவனிடம் இருந்து வருகிறது. சிவன் தனது கழுத்தில் இருந்து ஒரு அங்குலத்தில் மரணத்தை வைத்திருக்கிறார்.

உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை சிவனின் கழுத்தில் உள்ள பாம்பு பிரதிபலிக்கிறது. ஒருபோதும் பின்வாங்கக்கூடாது என்பதை குறிக்கிறது. அந்த உணர்வோடுதான் நாங்கள் போராடினோம். ஆளுங்கட்சி வன்முறையை ஊக்குவிக்கிறது. அவர்கள், இந்துக்களே அல்ல. பாஜகவுடன் போரிட்டபோது கூட, ​​நாங்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. நாங்கள் உண்மையைப் பாதுகாத்தபோது கூட ​​எங்களிடம் ஒரு துளி வன்முறை வெளிப்படவில்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ராணுவ வீரர்களிடையே அக்னிவீர் திட்டம் பாகுபாடு காட்டுவதாக இருக்கிறது. அக்னிவீரர்கள் போரில் உயிர் இழந்தால் அவர்களுக்கு தியாகி என்ற அந்தஸ்து வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. பணமதிப்பு நீக்கம் போல, அக்னிவீர் திட்டமும் பிரதமர் அலுவலகத்தால் தன்னிச்சையாக வகுக்கப்பட்டது” என்றார்.

Also Read: 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்.. என்ன எதிர்ப்பார்க்கலாம்?