5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Shocking Video: பைக்கில் மனைவியை கயிற்றால் கட்டிய கணவன்.. தரதரவென இழுத்து சென்ற கொடூரம்.. அதிர்ச்சி வீடியோ

Crime: ராஜஸ்தானில் மனைவியை பைக்கில் கட்டி இழுத்துச் சென்று துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் மனைவியின் கை, கால்களை கயிற்றால் கட்டி கரடுமுரடான பாதையில் தரதரவென இழுந்து வந்துள்ளார். அங்கிருக்கும் மக்கள் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் எடுத்த வீடியோவில் இது பதவாகி உள்ளது.

Shocking Video: பைக்கில் மனைவியை கயிற்றால் கட்டிய கணவன்.. தரதரவென இழுத்து சென்ற கொடூரம்.. அதிர்ச்சி வீடியோ
கைது
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 14 Aug 2024 16:13 PM

மனைவியை துன்புறுத்திய கணவன்: ராஜஸ்தானில் மனைவியை பைக்கில் கட்டி இழுத்துச் சென்று துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் ராம் மேக்வால். இவர் எந்த வேலைக்கு செல்லாமல் தனது மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டு தாக்கி வந்திருக்கிறார். இதோடு, அப்பகுதி மக்களிடம் தகராறில் அடிக்கடி ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் கிராமத்தில் இருந்து இவர்களை தள்ளி வைத்துள்ளனர். இதற்கிடையில், இவரின் மனைவி, ஜெய்சால்மரில் உள்ள தன்னுடைய சசோதரியை பார்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதற்கு மறுத்த தெரிவித்திருக்கிறார் பிரேம் ராம் மேக்வால். இதனால், மனைவி, பிரேம் ராமை வற்புறுத்தியுள்ளதாக தெரிகிறது.

Also Read: நிலச்சரிவால் நிலைகுலைந்த வயநாடு.. உயிரிழந்தவர்களுக்கு நிதி உதவி அறிவிப்பு.. யார் யாருக்கு எவ்வளவு?

இதனை அடுத்து, மனைவியை தனது பைக்கின் பின் பகுதியில் கயிற்றினால் கட்டி தரதரவென சாலையில் இழுத்து சென்றுள்ளார். இது சம்பந்தமான வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், இருசக்கர வாகனத்தில் கயிற்றால் கை, கால்களை கட்டி கரடுமுரடான பாதையில் தரதரவென இழுந்து வந்துள்ளார்.

ஷாக் வீடியோ:


அங்கிருக்கும் மக்கள் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் எடுத்த வீடியோ இது பதவாகி உள்ளது. இதுகுறித்த வெளியான தகவலின்படி, ஒரு மாதத்திற்கு முன்பு நஹர்சிங்புரா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், தற்போது இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Also Read: சிபிஐ-க்கு மாற்றப்பட்ட கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு.. நாடு முழுவது மருத்துவர்கள் தொடர் போராட்டம்!

தற்போது தனது உறவினர் வீட்டில் இருக்கும பெண்ணை தொடர்பு கொண்ட போலீசார், பிரேம் ராம் மேக்வாலைக் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண் தற்போது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பெண் புகார் எதுவும் கொடுக்கவில்லை. இருப்பினும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததற்காக நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்” என்று தெரிவித்தனர்.

Latest News