Dana Cyclone: இன்று நள்ளிரவு முதல் கரையை கடக்கும் டானா புயல்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.. - Tamil News | the severe cyclonic storm dana likely to make landfall between tonight and tomorrow morning near odisha and west bengal precautionary measures taken know more | TV9 Tamil

Dana Cyclone: இன்று நள்ளிரவு முதல் கரையை கடக்கும் டானா புயல்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..

டானா புயல், இன்று நள்ளிரவு முதல் அக்டோபர் 25 ஆம் தேதி காலை வரை காற்றின் வேகத்துடன் கூடிய கடுமையான சூறாவளி புயலாக வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையைக் கடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மணிக்கு 100-110 கிமீ வேகத்தில் 120 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Dana Cyclone: இன்று நள்ளிரவு முதல் கரையை கடக்கும் டானா புயல்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..

கோப்பு புகைப்படம்

Updated On: 

24 Oct 2024 07:42 AM

மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்று அக்டோபர் 24 ஆம் தேதி அதிகாலை 02:30 மணி அளவில் மையம் கொண்டிருந்த கடுமையான சூறாவளி புயல் “டானா” (டானா என உச்சரிக்கப்படுகிறது). அதே பகுதி, அட்சரேகை 18.3° N மற்றும் தீர்க்கரேகை 88.3°E, பாரதீப் (ஒடிசா) க்கு தென்கிழக்கே சுமார் 280 கிமீ தொலைவில், தாமராவின் (ஒடிசா) தென்-தென்கிழக்கே 310 கிமீ மற்றும் சாகர் தீவின் (மேற்கு வங்கம்) தெற்கு-தென்கிழக்கே 370 கிமீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது இன்று நள்ளிரவு முதல் அக்டோபர் 25 ஆம் தேதி காலை வரை காற்றின் வேகத்துடன் கூடிய கடுமையான சூறாவளி புயலாக வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையைக் கடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மணிக்கு 100-110 கிமீ வேகத்தில் 120 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


இன்று இரவு பிடர்கனிகா மற்றும் தாம்ரா இடையே ‘டானா’ புயல் கரையை கடக்கக்கூடும் என்பதால், சுமார் 4 லட்சம் மக்கள் புயல் முகாம்களுக்கு வெளியேற்றப்பட்டனர், அதே நேரத்தில் முதல்வர் மோகன் சரண் மஜி மாவட்ட நிர்வாகங்களை காலை 11 மணிக்குள் வெளியேற்றும் பணியை முடிக்குமாறு கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக பேசிய முதலமைச்சர், “ எத்தகைய சூழ்நிலை வந்தாலும் அதைச் சமாளிக்க மாநில அரசு முழுமையாக தயாராக உள்ளது. மக்கள் பீதியடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் பாதுகாப்பான கைகளில் இருக்கிறீர்கள். நாங்கள் பல அமைப்புகளின் உதவியுடன் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், ” என தெரிவித்துள்ளார்.

Also Read: ரோல்ஸ் ராய்ஸில் ஜாலி ரைடு போன ஆகாஷ் அம்பானி… விலை எவ்வளவு தெரியுமா?

மேலும், “14 மாவட்டங்களில், முதன்மையாக கடலோரப் பகுதியில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட பாதிக்கப்படக்கூடிய இடங்களை மாநிலம் கண்டறிந்து, அங்கு இருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் நடைமுறைகளைத் தொடங்கியுள்ளது. டானா புயல் கரையை கடக்கும் முன் 10,60,336 பேர் வெளியேற்றப்படுவார்கள்” என்று ஒடிசா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சுரேஷ் பூஜாரி தெரிவித்துள்ளார்.

ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பத்ரக் மற்றும் பாலசோர் மாவட்டங்கள் புயலின் அதிகபட்ச தாக்கத்தை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காற்றின் வேகம் மணிக்கு 100-120 கிமீ வேகத்தில் வீசக்கூடும், இதில் கனமழை முதல் மிக கனமழை வரை இருக்கும். மேலும் பல கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

புயலை எதிர்கொள்ளும் வகையில் மேற்கு வங்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக புயலின் பாதிப்புகள் அதிகம் இருக்கும் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று முதல் 26 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: இர்ஃபான் விவகாரம்.. 10 நாட்கள் மருத்துவமனை செயல்பட தடை, ரூ.50 ஆயிரம் அபராதம்!

‘டானா’ புயலைக் கருத்தில் கொண்டு ஒடிசா, மேற்கு வங்காளம் உள்பட 5 மாநிலங்களில் மொத்தம் 56 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மரம் வெட்டும் கருவிகள், மழை நீர் அகற்றும் மோட்டார் பம்புகள், படகுகள், வெள்ள மீட்பு கருவிகள் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டானா புயல் காரணமாக, கொல்கத்தா விமான நிலையம் இன்று மாலை 6 மணி முதல் 15 மனீ நேரத்திற்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் வெளிநாட்டு பயணிகள் அதிகம் செல்லும் இடங்கள்!
சமைக்கும்போது செய்யக்கூடாத தவறுகள்..!
கர்ப்ப காலத்தில் கால் வீங்க காரணம் இதுதான்
மண் இல்லாமல் வளரக்கூடிய 10 செடிகள்!