5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பிறக்கப்போவது ஆணா? பெண்ணா? கர்ப்பிணியின் வயிற்றை கிழித்த கொடூர கணவன்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

உத்தர பிரதேச மாநிலத்தில் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிய மனைவியின் வயிற்றை அரிவாளால் கணவர் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர கணவனருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தர பிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. எட்டு மாத கர்ப்பினியான அனிதாவை தொடர்ந்து மிரட்டி வந்தார் பன்னா லால். சம்பவத்தன்று அனிதாவிடம் சண்டையிட்ட பன்னா லால், வயிற்றைக் கிழித்து குழந்தையின் பாலினத்தை அறியப்போவதாக மிரட்டினார். இதனை அதிர்ச்சியடைந்த அனிதா தப்பிக்க முயன்றபோது, பன்னா லால் அவரின் வயிற்றை அரிவாளார் வெட்டினார்.

பிறக்கப்போவது ஆணா? பெண்ணா? கர்ப்பிணியின் வயிற்றை கிழித்த கொடூர கணவன்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
கர்ப்பிணி (மாதிரிப்படம்)
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 25 May 2024 13:04 PM

கர்ப்பிணியின் வயிற்றை கிழித்த கொடூர கணவன்: உத்தர பிரதேச மாநிலத்தில் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிய மனைவியின் வயிற்றை அரிவாளால் கணவர் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர கணவனருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தர பிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பன்னா லால். இவர் சுயதொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அனிதா. இந்த தம்பதிக்கு திருமணமாகி 22 ஆண்டுகள் ஆனது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஐந்து பெண் குழந்தைகள் உள்ளனர். எனவே, அடுத்த குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என பன்னா லால் அடிக்கடி மனைவியிடம் சண்டையிட்டு வந்திருக்கிறார்.

ஆண் குழந்தை வேண்டும் என பன்னா லாலின் விருப்பத்தை அறிந்த அனிதாவின் குடும்பத்தினர், இந்த விஷயத்தில் சண்டையிட வேண்டாம் என்று அவரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அதை பன்னா லால் கேட்காமல், ஆண் குழந்தை பிறக்காவிட்டால் அனிதாவை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என அவரின் குடும்பதையும் மிரட்டியுள்ளார்.

Also Read: “எந்த ஆதாரமும் சிக்கவில்லை” மதுபான கொள்கை ஊழல் வழக்கு குறித்து கெஜ்ரிவால் பளீச்!

ஆயுள் தண்டனை:

எட்டு மாத கர்ப்பிணியான அனிதாவை தொடர்ந்து மிரட்டி வந்தார் பன்னா லால். சம்பவத்தன்று அனிதாவிடம் சண்டையிட்ட பன்னா லால், வயிற்றைக் கிழித்து குழந்தையின் பாலினத்தை அறியப்போவதாக மிரட்டினார். இதனை அதிர்ச்சியடைந்த அனிதா தப்பிக்க முயன்றபோது, பன்னா லால் அவரின் வயிற்றை அரிவாளார் வெட்டினார்.

இதனை அறிந்த அனிதாவின் சகோதரர் சம்பவ இடத்திற்கு வந்தபோது பன்னா லால் தப்பியோடினார். பின்னர், போலீசார் சம்பவ இடத்திற்கு உடனே வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அனிதாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து அவரை காப்பாற்றினர். ஆனால், அவரது வயிற்றில் இருந்த ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பன்னா லால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கில் இறுதி விசாரணை நேற்று நடந்தபோது, தனக்கு நேர்ந்த கொடுமைகளை அனிதா நீதிமன்றத்தில் தெரிவித்தார். அனிதா தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், தன்னை தானே காயப்படுத்திக் கொண்டதாக பன்னா லால் நீதிமன்றத்தில் வாதிட்டார். இந்த நிலையில், மனைவியின் வயிற்றை கிழத்த பன்னா லாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சவுரப் சக்சேனா தீர்ப்பளித்தார்.

Also Read: திரௌபதி முர்மு டூ ராகுல் காந்தி வரை.. ஜனநாயக கடமையாற்றிய தலைவர்கள்!

Latest News