5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

”வீட்டில் இருக்கும் பேய்யை விரட்டணும்” ஒரு வயது குழந்தையை நரபலி கொடுத்த தம்பதி.. அதிர்ச்சி வாக்குமூலம்!

உத்தர பிரசேதத்தில் ஒரு வயது குழந்தை நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருக்கும் ஆவியை விரட்டுவதாக நடத்திய   சடங்கின்போது பெற்ற குழந்தையை பெற்றோர் கொலை செய்துள்ளனர். இதனை அறிந்த போலீசார் இவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

”வீட்டில் இருக்கும் பேய்யை விரட்டணும்” ஒரு வயது குழந்தையை நரபலி கொடுத்த தம்பதி.. அதிர்ச்சி வாக்குமூலம்!
மாதிரிப்படம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 12 Oct 2024 16:27 PM

உத்தர பிரசேதத்தில் ஒரு வயது குழந்தை நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருக்கும் ஆவியை விரட்டுவதாக நடத்திய   சடங்கின்போது பெற்ற குழந்தையை பெற்றோர் கொலை செய்துள்ளனர். இதனை அறிந்த போலீசார் இவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் முசாப் நகரில் உள்ள பெல்டா கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் (35). இவர் கூலி வேலை செய்து வருகிறது. இவரது மனைவி மம்தா (32). இவரது முதல் மனைவியை இறந்ததால் கடந்த ஆண்டு மம்தாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தைகள் இருந்தது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே மம்தாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் மாந்தீரிகம் செய்யும் நபரை பார்ப்பற்கு மம்தா மற்றும் கோபால் சென்றனர். அங்கு அந்த நபர், உங்கள் வீட்டில் தீய ஆவி இருப்பதாகவும், அதனை விரட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளர்.

குழந்தையை நரபலி கொடுத்த தம்பதி

குறிப்பாக உங்கள வீட்டில் பெண் குழந்தை பிறந்ததற்கு பிறகு ஆவி இருப்பதாகவும், அதனால் பெண் குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து, அந்த தம்பதியும் ஒருநாளை தேர்வு செய்து மாந்தீரிகம் செய்யவும் நபரை வீட்டிற்கு அழைத்துள்ளனர்.

அப்போது சில மாந்திரீக பூஜைகளை செய்து குழந்தையை நரபலி கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. குழந்தையை கொன்று உடலை கால்வாயில் வீசியுள்ளனர். இதனை அடுத்து குழந்தையை காணவில்லை என்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Also Read: டாடா அறக்கட்டளைக்கு புதிய தலைவர் நியமனம்.. யார் இந்த நோயல்?

இதுகுறித்து போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  இதுகுறித்து சந்தேகத்தின் பேரில் கோபாலிடம் போலீசார் விசாரணை செய்ததில் குழந்தையை கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனை அடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தர பிரதேசத்தில் தொடரும் கொடூரம்:

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் உத்தர பிரதேசத்தில் 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை பள்ளி ஆசிரியர்கள் நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹத்ராஸ் மாவட்டத்தில் பள்ளியில் ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர்கள் இந்த கொடூர செயலை செய்துள்ளனர்.

பள்ளிக்கு பெயரும் புகழும் கிடைப்பதற்காக குழந்தையை நரபலி கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ஒரு குழந்தையை அவர்கள் கொலை செய்ய முயன்றபோது அது நிகழாமல் போனதும் விசாரணையில் அம்பலமானது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐந்து பேரை கைது செய்தனர்.

11 வயது சிறுவனை நரபலி கொடுத்த சம்பவத்தில் தனியார் பள்ளி இயக்குநர், அவரது தந்தை, 3 ஆசிரியர்கள் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், தற்போது இதே போன்று ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டில் பேய் விரட்டுவதாக ஒரு வயது குழந்தையை  தம்பதியினர் நரபலி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஹரியானா புதிய முதல்வர் இவரா? அக்டோபர் 17ல் பதவியேற்பு.. பிரதமர் மோடி பங்கேற்பு

நாட்டில் பல இடங்களில் பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் நரபலி கொடுக்கும் சம்பங்கள் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு கூட கேரளாவில் இரண்டு பெண்களை 56 துண்டுகளாக வெட்டி நரபலி கொடுத்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இதுபோன்ற நரபலி கொடுக்கும் சம்பவங்கள் கேரள மட்டுமின்றி உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் சிறுவர்கள் உட்பட அனைவரையும் மூட நம்பிக்கை என்ற பெயரில் நரபலி கொடுத்து வருகின்றனர்.  இதனை தடுக்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News