Hathras stampede : உத்தரபிரதேசம் ஹத்ராஸில் ஷாக்.. கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் பலி
Uttar Pradesh Hathras : கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவத்தில் 27பேர் இதுவரை உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஹத்ராஸ் மாவட்டத்தின் சிக்கந்தரா ராவ் காவல் நிலையத்திற்கு உட்பட்ட புல்ராய் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆன்மீக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் கிடைத்ததும் காவல்துறையினரும், மருத்துவத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
![Hathras stampede : உத்தரபிரதேசம் ஹத்ராஸில் ஷாக்.. கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் பலி Hathras stampede : உத்தரபிரதேசம் ஹத்ராஸில் ஷாக்.. கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் பலி](https://images.tamiltv9.com/uploads/2024/07/hathras.jpg?w=1280)
ஹத்ராஸ் பயங்கரம் : உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் பயங்கர விபத்து ஏற்பட்டது. ஆன்மிக நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவத்தில் 27பேர் இதுவரை உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஹத்ராஸ் மாவட்டத்தின் சிக்கந்தரா ராவ் காவல் நிலையத்திற்கு உட்பட்ட புல்ராய் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆன்மீக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் கிடைத்ததும் காவல்துறையினரும், மருத்துவத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலர் காயமடைந்துள்ளதால்பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த துயரச் சம்பவத்திற்கு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.