5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: மோசமான ஒருதலைக் காதல்.. இளம்பெண் கொடூர கொலை.. கட்டிடத்திற்குள் உடல் புதைப்பு.. பகீர் பின்னணி!

உத்தர பிரதேசத்தில் ஒருதலைக் காதலால் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருமணம் செய்ய மறுத்ததால் அத்தையின் கணவன் இளம்பெண் மான்சியை கொன்று அவரது உடலை கட்டிடத்திற்குள் புதைத்துள்ளார். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட அத்தையின் கணவனை போலீசார் கைது செய்தனர்.

Crime: மோசமான ஒருதலைக் காதல்.. இளம்பெண் கொடூர கொலை.. கட்டிடத்திற்குள் உடல் புதைப்பு.. பகீர் பின்னணி!
கொலை செய்யப்பட்ட பெண்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 25 Aug 2024 07:41 AM

இளம்பெண் கொடூர கொலை: உத்தர பிரதேசத்தில் ஒருதலைக் காதலால் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஹர்தோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்சாகர் பாண்டே. இவரது மகள் மான்சிபாண்டே (22). இவரது மகள் ரக்சாபந்தன் பண்டிகைக்காக தனது அத்தையின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஆனால், அவரை காணவில்லை என்றும், செல்போனில் தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாகவும் அத்தையின் கணவர் மாணிக்கந்த்திவேதி என்பவர் மான்சியின் தந்தை ராம்சாகர் பாண்டேயிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து உறவினர்கள் மாயாமான மான்சியை பல இடங்களில் தேடி பார்த்தார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையே அவர் யாரோ ஒரு இளைஞருடன் மான்சி சென்றுவிட்டாகவும் அவரது உறவினர்கள் கூறினர். இதனால் மாணிக்கத்தின் நடவடிக்கையில் தந்தை ராம்சாகருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, மான்சியின் தற்தை அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Also Read: திருமணமான 15 நாள்.. திருப்பதி கோயிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. புதுமாப்பிள்ளை மரணம்!

இதனை அடுத்து, மாணிக்கந்தை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் தனக்கு எதுவும் கூறிய அவர், போலீசாரின் தீவிர விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்களை கூறினார். அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக மான்சியை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரத்தை அவரிடம் கூறவில்லை. இதற்கிடையே மான்சிக்கு வரும் நவம்பர் 27ஆம் தேதி வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் பற்றி மாணிக்கந்திடம் மான்சி கூறியிருக்கிறார்.

ஒருதலைக் காதல்:

இதனை அடுத்து, அவர் மான்சியிடம் தனது ஒருதலைக்காதல் விவகாரத்தை கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த மான்சி அவரது காதலை ஏற்க மறுத்து நான் வேறு ஒருவரை திருமணம் செய்ய இருக்கிறேன் என்று கூறினார். இதனால் மாணிக்கந்த் ஆத்திரம் அடைந்தார். பின்னர், அவரை ஒரு கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கு அவரது வாயைப் பொத்தி மூச்சை நிறுத்து படுககொலை செய்தார்.

Also Read: மனைவி, 5 வயது குழந்தை கழுத்தறுத்து கொலை… கணவன் விபரீத முடிவு.. பகீர் காரணம்!

பின்னர், அவரை உடலை கட்டுமானப் பணி நடைபெற்று கொண்டிருந்த கட்டிடத்திற்குள் புதைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். மேலும், போலீசாரின் விசாரணையை திசை திருப்ப மான்சியின் செல்போனை ஓடும் பேருந்தில் இருந்து வீசியதாகவும் கூறினார். அதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், புதைக்கப்பட்ட மான்சியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஒருதலைக் காதலால் இளம்பெண் கொலை செய்யப்பட்ட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest News