5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

காலையில் கணவருக்காக விரதம்… மாலையில் போட்டு தள்ளிய மனைவி.. அதிர்ச்சி காரணம்!

Uttar Pradesh Murder: உத்தர பிரதேசத்தில் கணவரின் நீண்ட ஆயுளுக்கு மனைவி காலையில் விரதத்தை முடித்த கையுடன் மாலை நேரத்தில் கணவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இஸ்லாமில்பூர் பகுதியில் நடந்துள்ளது.

காலையில் கணவருக்காக விரதம்… மாலையில் போட்டு தள்ளிய மனைவி.. அதிர்ச்சி காரணம்!
மாதிரிப்படம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 22 Oct 2024 07:32 AM

உத்தர பிரதேசத்தில் கணவரின் நீண்ட ஆயுளுக்கு மனைவி காலையில் விரதத்தை முடித்த கையுடன் மாலை நேரத்தில் கணவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இஸ்லாமில்பூர் பகுதியில் நடந்துள்ளது. நாட்டின் வட மாநிலங்களில் ‘கர்வா சவுத்’ என்ற பண்டிகை ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு நேற்று ‘கர்வா சவுத்’ என்ற பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் கணவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டிய பெண்கள் விரதம் இருந்து இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள்.

காலையில் கணவருக்காக விரதம்

அன்றைய நாளில் மனைவிகள் உணவும் தண்ணீரும் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். மாலையில் பிரார்த்தனை செய்துவிட்டு தங்களது விரதத்தை முடிப்பார்கள். இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் கணவருக்காக விரதம் இருந்து மாலையில் அவரை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் கௌசாம்பி மாவட்டம் லால் பகதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷைலேஷ் (32). இவரது மனைவி சவிதா. இவர் கணவரின் நீண்ட ஆயுளுக்காக நேற்று காலையில் விரதம் இருந்தார் சவிதா. மனைவியின் இந்த விரதத்திற்கு அவரது கணவர் ஷைலேஷ் குமாரும் உதவியாக இருந்துள்ளார்.

Also Read: இந்தியா சீனா எல்லை பிரச்சனை – முக்கிய தகவல் சொன்ன வெளியுறவு துறை செயலாளர்

மாலையில் சவிதா விரதத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார். வீட்டிற்கு சென்ற சில நேரத்திலேயே அவர் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும், சில நிமிடங்களில் இருவரும் சேர்ந்து சாப்பிட்டுள்ளனர்.

மாலையில் கணவரை கொலை செய்த மனைவி

அவர் சாப்பிட்டு கொண்டே இருக்கும்போதே பக்கத்து வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு சவிதா சென்றிருக்கிறார். உணவை சாப்பிட்ட ஷைலேஷ் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதற்கிடையில் ஷைலேஷ் சகோதரர் அகிலேஷ் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது, மயங்கிய நிலையில் கிடந்த ஷைலேஷ் குமாரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டாக கூறினார்.

மேலும், இவருக்கு விஷம் வைத்து கொலை செய்ததாகவும் மருத்துவர்கள் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக அகிலேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தலைமறைவாக இருந்த சவிதாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கணவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மேலும், கணவருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்ததை வீடியோகவும் பதிவு செய்து போலீசாருக்கும் அனுப்பி உள்ளார்.

Also Read: காஷ்மீரில் மீண்டும் அட்டகாசம்.. தீவிரவாதிகள் தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

அதில், “எனது கணவரின் நடத்தையில் எனக்கு சந்தேகம் இருந்தது. இவர் வேறொரு பெண்ணுடன் உறவில் இருந்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு விஷம் வைத்து கொலை செய்தேன்” என கூறியுள்ளார்.  கணவரை கொலை செய்த சவிதை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலையில் கணவரின் ஆயுளுக்காக விரதம் இருந்த பெண், மாலையில் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest News