5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

காதலுனுடன் சேர்ந்து தந்தையை கொடூரமாக கொன்ற சிறுமி.. பகீர் காரணம்!

UP Crime: உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் கர்முல்லாபூர் பகுதியில் 17 வயது சிறுமி, காதலனுடன் சேர்ந்து தந்தையை கழுத்தறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் கூற்றுப்படி, உணவில் தூக்க மாத்திரைகளை கலந்ததால், சிறுமியின் குடும்பத்தினர் மயக்கத்தில் இருந்திருக்கின்றனர். இந்த தூக்க மாத்திரைகளை அவரது  காதலனிடம் சிறுமி வாங்கி வர சொல்லிருக்கிறார். அப்போது மயக்க நிலையில் இருந்த தந்தையின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளதாக தெரிவித்தனர். 

காதலுனுடன் சேர்ந்து தந்தையை கொடூரமாக கொன்ற சிறுமி.. பகீர் காரணம்!
கொலை (மாதிரிப்படம்)
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 23 May 2024 11:58 AM

காதலுக்கு எதிர்ப்பு: உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் கர்முல்லாபூர் பகுதியில் 17 வயது சிறுமி, காதலனுடன் சேர்ந்து தந்தையை கழுத்தறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் கூற்றுப்படி, உணவில் தூக்க மாத்திரைகளை கலந்ததால், சிறுமியின் குடும்பத்தினர் மயக்கத்தில் இருந்திருக்கின்றனர். இந்த தூக்க மாத்திரைகளை அவரது  காதலனிடம் சிறுமி வாங்கி வர சொல்லிருக்கிறார். அப்போது தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக தெரிவித்தனர்.  மேலும், கர்முல்லாபூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை இந்த சிறுமி காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த அவரது தந்தை அஜய் பால் இளைஞரிடன் பழகுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கண்டித்திருக்கிறார். சிறுயின் தந்தை, தாய், உறவினர் என அனைவரும் சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாக சொல்லப்படுகிறது.

Also Read: 6ஆம் கட்ட மக்களவை தேர்தல்… 58 தொகுதிகளில் இன்று ஓய்கிறது பரப்புரை!

தந்தையை கொன்ற சிறுமி:

இதனை அடுத்து பெற்றோரை கொலை செய்ய  சிறுமி திட்டமிட்டார். இதனால், தனது காதலனிடம் தூக்க மாத்திரைகளை வாங்கி வர சொல்லி இருக்கிறார். இதனை அடுத்து, தாய், தந்தை, அண்ணன் உள்ளிட்டோர் சாப்பிடக்கூடிய உணவில் தூக்க மாத்திரையை கலந்துள்ளார். தூக்க மாத்திரை கலந்த உணவை சாப்பிட்ட குடும்பத்தினர் மயக்க மடைந்தனர். இதன்பிறகு சிறுமி தன் காதலுக்கு போன் செய்து  வீட்டிற்கு வரவழைத்திருக்கிறார்.

பின்னர், இருவரும் சேர்ந்த  தந்தை அஜய்பாலை கழுத்தறுத்து கொலை செய்துள்ளனர்.  இதனை அடுத்து, அவரது அண்ணனையும் கொலை செய்ய முயற்சித்தார். அண்ணன் தூங்கி கொண்டிருக்கும் அறைக்கு சென்ற சிறுமி, அண்ணனை கத்தியால் குத்த முயன்றபோது அவர் அலறினார்.  அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு நுழைந்தபோது, சிறுமியின் தந்தை அஜய்பால் கழுத்தறுக்கப்பட்டு கிடப்பதை பார்த்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியையும், அவரது காதலனையும் கைது செய்தனர்.  இவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறார் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read: “நியாயமான விசாரணை தேவை” ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் கெஜ்ரிவால் பதில்!

 

Latest News