இன்ஜினியரிங் படித்தீர்களா? விமானத்துறையில் வேலை – உடனே அப்ளை பண்ணுங்க!
இந்திய விமான நிலையங்களில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமான நிலையங்களில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 490 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளைளே கடைசி நாளாகும்.
பணி விவரம்:
ஜூனியர் உதவியாளர் (Architecture) – 03
ஜூனியர் உதவியாளர் (Engineering Civil)- 90
ஜூனியர் உதவியாளர் (Engineering electrical) – 106
ஜூனியர் உதவியாளர் (Electronics) _ 278
ஜூனியர் உதவியாளர் (Information Technology) – 13
மொத்த பணியிடங்கள் – 490
கல்வித்தகுதி:
ஜூனியர் உதவியாளர் பணிக்கு 10,12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், மூன்றாண்டு பொறியியல் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிவில், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், ஐடி துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.05.24-யின் அடிப்படையில் அதிகபட்ச வயது 27க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு மாத சம்பளம் ரூ.14,000 முதல் ரூ.40,000 வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
- மேற்கண்ட பணியிடங்களுக்கு https://www.aai.aero/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
- இந்த லிக்கில் Careers என்ற ஆப்ஷனை கிளிக் செய்ததம் விண்ணப்ப படிவம் தோன்றும்.
- அந்த விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி, விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.
பணி குறித்த கூடுதல் விவரங்களுக்கு இந்த https://www.aai.aero/ லிக்கை கிளிக் செய்ய வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு ரூ.300, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (01.05.24) கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.