10ம் வகுப்பு முதல் டிகிரி வரை.. ரயில்வேயில் 4,660 காலிப் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
Railway Recruitment: ரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 4,660 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மே 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
![10ம் வகுப்பு முதல் டிகிரி வரை.. ரயில்வேயில் 4,660 காலிப் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! 10ம் வகுப்பு முதல் டிகிரி வரை.. ரயில்வேயில் 4,660 காலிப் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!](https://images.tamiltv9.com/uploads/2024/05/Screenshot-2024-05-05-093539.jpg?w=1280)
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்தவர்கள் மே 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்:
- உதவி காவல் ஆய்வாளர் – 452
- காவலர் – 4208
மொத்த பணியிடங்கள் – 4,660
கல்வித்தகுதி:
உதவி காவல் ஆய்வாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும். காவலர் பணிக்கு 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
உதவி காவல் ஆய்வாளர் பணிக்கு 20 முதல் 28 வயது வரை இருக்க வேண்டும். காவலர் பணிக்கு 18 முதல் 28 வயது வரை இருக்க வேண்டும். இதில், அரசு விதிகளின்படி வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகுளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.
மாத சம்பளம்:
உதவி காவல் ஆய்வாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.35,400 வழங்கப்படுகிறது. காவலர் பணிக்கு மாத சம்பளமாகரூ.21,700 வழங்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணிகளுக்கு கணினி வழித் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் உடல் பரிசோதனை மற்றும் சான்றிதழ்கள் சரி பார்ப்பு மூலம் தகுதியானர்கள் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், சிறுபான்மையினர் அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் ஆகியோர் 250 ரூபாயும், மற்றவர்கள் 500 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக இணையதளம் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
மேற்கண்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்க 14.05.2024 கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.