10ம் வகுப்பு முதல் டிகிரி வரை.. ரயில்வேயில் 4,660 காலிப் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
Railway Recruitment: ரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 4,660 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மே 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்தவர்கள் மே 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்:
- உதவி காவல் ஆய்வாளர் – 452
- காவலர் – 4208
மொத்த பணியிடங்கள் – 4,660
கல்வித்தகுதி:
உதவி காவல் ஆய்வாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும். காவலர் பணிக்கு 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
உதவி காவல் ஆய்வாளர் பணிக்கு 20 முதல் 28 வயது வரை இருக்க வேண்டும். காவலர் பணிக்கு 18 முதல் 28 வயது வரை இருக்க வேண்டும். இதில், அரசு விதிகளின்படி வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகுளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.
மாத சம்பளம்:
உதவி காவல் ஆய்வாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.35,400 வழங்கப்படுகிறது. காவலர் பணிக்கு மாத சம்பளமாகரூ.21,700 வழங்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணிகளுக்கு கணினி வழித் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் உடல் பரிசோதனை மற்றும் சான்றிதழ்கள் சரி பார்ப்பு மூலம் தகுதியானர்கள் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், சிறுபான்மையினர் அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் ஆகியோர் 250 ரூபாயும், மற்றவர்கள் 500 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக இணையதளம் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
மேற்கண்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்க 14.05.2024 கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.