Jobs Alert: தேர்வு எதுவும் இல்லை.. 8ஆம் வகுப்பு முடித்தாலே வேலை.. உடனே அப்ளே பண்ணுங்க! - Tamil News | | TV9 Tamil

Jobs Alert: தேர்வு எதுவும் இல்லை.. 8ஆம் வகுப்பு முடித்தாலே வேலை.. உடனே அப்ளே பண்ணுங்க!

Published: 

13 Jul 2024 17:34 PM

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் உள்ள அலுவலக உதவியாளர், துப்புரவாளர், தோட்ட துப்புரவாளர் ஆகிய பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே விண்ணப்பிக்க முடியும். இந்த பணியிடத்திற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Jobs Alert: தேர்வு எதுவும் இல்லை.. 8ஆம் வகுப்பு முடித்தாலே வேலை.. உடனே அப்ளே பண்ணுங்க!

வேலைவாய்ப்பு

Follow Us On

தமிழக வளர்ச்சித் துறையில் வேலை: தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் உள்ள அலுவலக உதவியாளர், துப்புரவாளர், தோட்ட துப்புரவாளர் ஆகிய பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே விண்ணப்பிக்க முடியும். இந்த பணியிடத்திற்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு விண்ணப்பிக்க தகுதிகள் என்ன, சம்பளம் எவ்வளவு, இதர விவரங்களை கீழ்கண்டவாறு பார்க்கலாம்.

பணி விவரங்கள்:

அலுவலக உதவியாளர் – 04

துப்புரவாளர் – 01

தோட்ட துப்புரவாளர் – 01

கல்வித்தகுதி:

அலுவலக உதவியாளர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். துப்புரவாளர், தோட்டத் துப்புரவாளர் பணிகளுக்க 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Also Read: டிப்ளமோ முடித்தவரா? தமிழக அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க

வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடங்களுக்கு 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 34 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளவு அளிக்கப்படுகிறது. அதன்படி, பொதுப் பிரிவினருக்கு 32 வயது, ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 37 வயது, ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 34 வயது வரை தளர்வு அளிக்கப்படுகிறது.

ஊதிய விவரம்:

அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. துப்புரவாளர் பணிக்கு மாத ஊதியமாக ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தோட்ட துப்புரவாளர் பணிக்கு ரூ.4,100 முதல் ரூ.12,200 வரை மாத சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் புகைப்படம், முகவரி, பிறந்தநாள், மதம், இனம், கல்வித்தகுதி, முன்னுரிமை கோருவதற்கான சான்று, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய விவரங்களின் நகலுடன் நேரிலோ அல்லது அஞ்சலிலோ தமிழ் வளர்ச்சி துறை முகவரிக்கு அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

முகவரி:

தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி இயக்கம்
தமிழ்ச்சாலை
எழும்பூர், சென்னை – 600 008

மேற்கண்ட பணியிடத்திற்கு  விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஜூலை 26ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்  என்று அறிவிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தபால் துறையில் அட்டகாசமான வேலை.. ரெடியாகுங்க மக்களே!

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version