5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இந்து அறநிலையத்துறையில் சூப்பர் வேலை.. 8ஆம் தேர்ச்சியே போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க!

Tamilnadu HRCE Jobs: இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? என்பது குறித்து பார்ப்போம்.

இந்து அறநிலையத்துறையில் சூப்பர் வேலை.. 8ஆம் தேர்ச்சியே போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க!
அறநிலையத்துறையில் வேலை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 10 Sep 2024 12:08 PM

அறநிலையத்துறையில் சூப்பர் வேலை: தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோயில் அறிநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த துறையின் அமைச்சராக சேகர் பாபு இருந்து வருகிறார். சென்னை, கோவை, மதுரை, நெல்லை என முக்கிய நகரங்களில் உள்ள கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற துறைகளே போலவே இந்த துறையிலும் ஏகப்பட்ட வேலைகள் கொட்டிக் கிடக்கின்றன. அறநிலையத்துறை வேலை தொடர்பாக அறிவிப்புகளும் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தற்போது ஒரு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? என்பது குறித்து பார்ப்போம்.

Also Read: +2 தேர்ச்சி போதும்.. மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம்.. ரயில்வேயில் அட்டகாசமான வேலை!

பணி விவரம்:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் அர்த்த நாரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை அறிநிலையத்துறை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோயிலில் மொத்தம் 4 ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

இந்த பணியிடத்திற்கு எதாவது ஒரு பள்ளியில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருடம் ஓட்டுநர் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முதலுதவி குறித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது விவரம்:

மேற்கண்ட பணிடத்திற்கு வயது வரம்பானது 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். அதேபோல 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.9,250 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி? 

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தபால் வழியாக விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொண்டு அதில் கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். மேலும், அதில் கேட்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் போன்ற சான்றுகளை ஜெராக்ஸ் எடுத்து விண்ணப்ப படிவத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.

முகவரி:

உதவி ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்,
திருச்செங்கோடு நகர் மற்றும் வட்டம்,
நாமக்கல் மாவட்டம் – 637211

என்ற முகவரிக்கு மேற்கண்ட விவரங்களை பூர்த்தி செய்து உங்களது விண்ணப்ப படிவத்தை உரிய முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Also Read: டிகிரி முடித்தவரா? 300 காலி இடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க!

முக்கிய தேதி:

திருக்கோயில் உள்ள ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான ஆவணங்களை இணைத்து 04.10.2024 மாலை 5 மணிக்குள் உரிய முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Latest News