சம்மர் வந்துட்டா போதும் இதை சாப்பிடலாமா, வேண்டாமா என்று ஒவ்வொன்றையும் யோசித்து சாப்பிட ஆரம்பித்துவிடுவோம். அதிலும் அதிக ஹீட் கொண்ட பழ வகைகள், காரமான உணவு வகைகள் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துதான் சாப்பிடுவோம். வயிற்றுக்குச் சேருமோ சேராதோ, சூட்டைக் கிளப்பிவிடுமோ என்று மிகுந்த பயம் இருக்கும். அதிலும் நான்வெஜ்ஜில் மீன் கோழி சாப்பிடவே பயப்படுபவர்கள் நிறைய பேர். மட்டன் சூட்டைத் தகிக்கும் என்பதால் அதை ஓரளவுக்கு பயமின்றி எடுத்துக்கொள்வோம். அப்படி எதை எதை இந்த சம்மரில் சாப்பிடலாம் என ஆயுர்வேதம் சில தகவல்களை தந்திருக்கிறது. 1. இளநீர்: வெயிலுக்குக் கண்டிப்பாக எல்லோருமே இளநீர் அருந்த ஆசைப்படுவோம், ஆனால் அதை அருந்துவதற்கு சரியான நேரம் காலை 11 மணியிலிருந்து மதியம் 1 மணி வரைதான். இளநீரில் அதிக அளவு தாது உப்புகள் நிறைந்து காணப்படுவதால் இது செரிமானத்தை விரைந்து தூண்டி பசியெடுக்கச் செய்யும். எனவே பசிக்கவில்லை என்பவர்கள் இளநீர் குடித்துப் பாருங்கள் கபகபவென பசியெடுக்கும். இதை குடிப்பதால் இயற்கையான ஆற்றல் மற்றும் சக்தி கிடைக்கிறது.