5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Plastic Containers: எவ்வளவு கழுவினாலும் பிளாஸ்டிக் டப்பாவில் மஞ்சள் கறையா..? அகற்ற இந்த முறையே பயன்படுத்தலாம்!

Kitchen Hacks: பிளாஸ்டிக் பாத்திரங்களில் உள்ள சில கறைகளை நீக்குவது என்பது நமக்கு மிகப்பெரிய தலைவலியாக அமைந்துவிடுகிறது. அதிகபடியான எண்ணெய் மற்றும் மசாலா கொண்டு சென்று பயன்படுத்திய பிறகு பிளாஸ்டிக் டப்பாக்களில் அந்த எண்ணெய் பசைகள் மற்றும் மஞ்சள் கறைகள் போன்றவை இருக்கும். இவற்றை எவ்வளவு அழுத்தி தேய்த்தாலும் நம்மால் இவற்றை சுத்தம் செய்ய முடியாது. அந்த வகையில், இதுபோன்ற கறைகளை எப்படி சுத்தம் செய்வது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

Plastic Containers: எவ்வளவு கழுவினாலும் பிளாஸ்டிக் டப்பாவில் மஞ்சள் கறையா..? அகற்ற இந்த முறையே பயன்படுத்தலாம்!
பிளாஸ்டிக் டப்பா (Image: Crispin la valiente/Moment/Getty Images)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 19 Sep 2024 16:34 PM

பிளாஸ்டிக் பாத்திரங்கள் மற்றும் டப்பாக்களை அதிகமாக பயன்படுத்துவது ஆபத்தை ஏற்படுத்தலாம். பிளாஸ்டிக் பாத்திரங்கள் விலை குறைவாக இருப்பதாலும், வீடுகளில் இருக்கும் பிரிட்ஜ்களில் உணவை வைப்பதற்கும் அதிகம் பயன்படுத்துகிறோம். இதன் காரணமாக, கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் இவற்றை பயன்படுத்துகிறோம். அதிலும், பள்ளிக்கு அனுப்பும் குழந்தைகளுக்கும், அலுவலகங்களுக்கு கொண்டு செல்லும் மதிய உணவுக்கு பிளாஸ்டிக் டப்பாக்கள் பயனுள்ளதாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பிளாஸ்டிக் டப்பாக்களை முழுமையாக சுத்தம் செய்வது மிக மிக முக்கியம்.

இருப்பினும், பிளாஸ்டிக் பாத்திரங்களில் உள்ள சில கறைகளை நீக்குவது என்பது நமக்கு மிகப்பெரிய தலைவலியாக அமைந்துவிடுகிறது. அதிகபடியான எண்ணெய் மற்றும் மசாலா கொண்டு சென்று பயன்படுத்திய பிறகு பிளாஸ்டிக் டப்பாக்களில் அந்த எண்ணெய் பசைகள் மற்றும் மஞ்சள் கறைகள் போன்றவை இருக்கும். இவற்றை எவ்வளவு அழுத்தி தேய்த்தாலும் நம்மால் இவற்றை சுத்தம் செய்ய முடியாது. அந்த வகையில், இதுபோன்ற கறைகளை எப்படி சுத்தம் செய்வது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Lizard Remedies: வீடு முழுவதும் பல்லி தொல்லையா..? இந்த பொருட்களை கொண்டு ஓட ஓட விரட்டுங்க..!

டிஷ் வாஷ்:

வெதுவெதுப்பாக தண்ணீர் மற்றும் டிஷ் வாஷ்யை பயன்படுத்தி பிளாஸ்டிக் டப்பாக்களில் உள்ள மஞ்சள் மற்றும் எண்ணெய் கறைகளை அகற்றலாம். இதற்கு, ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீரை காய்ச்சி எடுத்துக்கொள்ளவும், அதில் சில துளிகள் டிஷ் வாஷை சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் இந்த கலவையில் ஒரு ஸ்கர்பை தொட்டு கறையின் மீது அழுத்தி தேய்க்கவும். இதன்பிறகு, பிளாஸ்டிக் டப்பாக்களில் உள்ள கறை முற்றிலும் நீங்கிவிடும்.

சோடா பைகார்பனேட்:

சோடாவின் பைகார்பனேட் ஒரு இயற்கையாகவே சுத்தம் செய்வதற்கு பெயர் பெற்றது. இது பாத்திரங்கள் மட்டுமின்றி பிளாஸ்டிக் டப்பாகளில் இருந்து பிடிவாதமான கறைகளை அகற்ற உதவும். இதற்கு, ஒரு பாத்திரத்தில் சோடா பைகார்பனேட் எடுத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்யவும். பின்னர் இந்த பேஸ்ட்டை கறையின் மீது தடவி சிறிது நேரம் உலர விடவும். இறுதியாக ஸ்கர்ப் கொண்டு அழுத்தி தேய்த்து, சுத்தமான தண்ணீரில் கழுவினால் கறைகள் போகும்.

வினிகர்:

பிளாஸ்டிக் பாத்திரங்கள் மற்றும் டப்பாகளில் இருந்து கறைகளை அகற்றுவதில் வினிகர் பயனுள்ளதாக இருக்கும். ஒரு பாத்திரத்தில் வினிகரை எடுத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலவையை தயார் செய்து கொள்ளவும். பின்னர் இந்த பேஸ்டை ஒரு ஸ்கர்ப் கொண்டு தேய்த்தால் கறை பறந்தோடும்.

ALSO READ: Egg Veg or Nonveg: முட்டை சைவமா? அசைவமா? புரட்டாசி மாதம் சாப்பிடலாமா..?

பல் துலக்கும் பேஸ்ட்:

பல் துலக்கும் பேஸ்டை கொண்டு பல் விலக்குவதற்கு மட்டும் பயன்படுத்தாமல், பிளாஸ்டிக் டப்பாகளில் இருக்கும் கறையை நீக்கவும் பயன்படுத்தலாம். கறை உள்ள இடங்களில் நேரடியாக பேஸ்டை தடவவும். அதன்பின், ஸ்கர்ப் கொண்டு அழுத்தி தண்ணீர் கொண்டு தேய்த்தால் கறைகள் இருக்காது.

பிளாஸ்டிக் டப்பாக்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்:

  • பிளாஸ்டிக் டிபனில் வைக்கப்படும் சூடான உணவு உடல் நலத்திற்கு கேடு. பிஸ்பெனோபில்-ஏ என்ற நச்சு கலவை பிளாஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. யாருடைய துகள்கள் உடலை அடைந்து புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களை உண்டாக்கும். எனவே இன்று முதல் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக எஃகு அல்லது கண்ணாடியை பயன்படுத்துங்கள்.
  • பிஸ்பெனால் ஏ (பிபிஏ) பிளாஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. பிபிஏ முதன்மையாக பாலிகார்பனேட் அல்லது பிசி (மறுசுழற்சி குறியீடு 7) எனப்படும் பிளாஸ்டிக் வகைகளில் காணப்படுகிறது. இது அதிக அளவில் இருந்தால், அது விஷமாக மாறலாம். இது இதய நோய், மார்பக புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்.
  • பிபிஏ என்பது மனித உடலில் ஈஸ்ட்ரோஜென் போன்ற ஹார்மோன்களை சமநிலையில் வைக்கும் ஒரு வேதிப்பொருள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் பல வகையான உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். ஹார்மோன் சமநிலையின்மை மனநிலை மாற்றங்கள், பதட்டம், மன அழுத்தம், எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் ஒவ்வாமை, இருதய நோய் மற்றும் புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
  • பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவு வைக்கப்பட்டு நீண்ட நேரத்திற்கு பிறகு உணவு உண்பதால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்கின்றனர் நிபுணர்கள். அதே சமயம், கர்ப்பிணிகள் பிளாஸ்டிக் பாத்திரங்களில் சேமித்து வைத்து பின்பு உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது பிறவி குறைபாடுகளை ஏற்படுத்தும்.

 

Latest News