Covid-19: இந்தியாவில் அதிகரித்துள்ள ஆட்டோ இம்யூன் பிரச்சனை.. கொரோனா தொற்றுதான் காரணமா? - Tamil News | after Corona epidemic, autoimmune problem has been found among the people of India | TV9 Tamil

Covid-19: இந்தியாவில் அதிகரித்துள்ள ஆட்டோ இம்யூன் பிரச்சனை.. கொரோனா தொற்றுதான் காரணமா?

Autoimmune: கொரோனா பரவலுக்கு பிறகு நமது வாழ்க்கை இயல்வு நிலைக்கு திரும்பினாலும், அதன் நீண்டகால உடல்நல பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆக் கிளினிக்கல் பயோகெமிஸ்டரி அண்ட் ரிசர்ச்சில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், கொரோனா தொற்றுநோய் பாதிப்புக்கு பிறகு இந்திய மக்களிடையே ஆட்டோ இம்யூன் பாதிப்புகள் 30 சதவீதம் அதிகரித்துள்ளதை கண்டறிந்துள்ளது.

Covid-19: இந்தியாவில் அதிகரித்துள்ள ஆட்டோ இம்யூன் பிரச்சனை.. கொரோனா தொற்றுதான் காரணமா?

கொரோனா தொற்று (Image: GETTY)

Published: 

22 Oct 2024 14:36 PM

சில வருடங்களுக்கு முன் உலகம் முழுவதும் கொரோனா தொற்று எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியது, எவ்வளவு பொருளாதார இழப்பை தந்தது மற்றும் எவ்வளவு உயிர்களை பறித்தது என்பது அனைவருக்கும் தெரியும். கொரோனா தொற்றால் ஏற்பட்ட உலகளாவிய பாதிப்புகளை தொடர்ந்து, நமது வாழ்க்கை இயல்வு நிலைக்கு திரும்பினாலும், அதன் நீண்டகால உடல்நல பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆக் கிளினிக்கல் பயோகெமிஸ்டரி அண்ட் ரிசர்ச்சில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், கொரோனா தொற்றுநோய் பாதிப்புக்கு பிறகு இந்திய மக்களிடையே ஆட்டோ இம்யூன் பாதிப்புகள் 30 சதவீதம் அதிகரித்துள்ளதை கண்டறிந்துள்ளது.

ALSO READ: IPL 2025 Retention: இன்னும் பதிலை சொல்லாத தோனி! அடுத்த சீசனில் விளையாடுவாரா? ஓய்வு பெறுவாரா?

மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேட் நடத்திய ஆய்வில், 2019ம் ஆண்டிலிருந்து கொரோனாவிற்கு முந்தைய (50,457) பாதிப்புகளையும், 2022 ஆண்டிலிருந்து கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்புகளை ஒப்பிட்டு 1.2 லட்சம் பாதிப்புகளை பகுப்பாய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, ஆட்டோ இம்யூன் நோய்களை கண்டறியப் பயன்படும் சோதனையான ஆன்டிநியூக்ளியர் ஆன்டிபாடி பாசிட்டிவிட்டியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதில், கடந்த 2019ல் 39.3 சதவீத பாதிப்புகள் இருந்தநிலையில், கடந்த 2022ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 69.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், நியூக்ளியர் ஹோமோஜினியஸ் பேட்டர்னில் 9 சதவீதம் உயர்வு இருந்தது. இது பொதுவாக சிஸ்டமிக் லூபஸ் எரிதிமடோசஸ் (SLE) மற்றும் முடக்கு வாதம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. 31-45 வயதுடைய நபர்களுக்கு இந்த பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆட்டோ இம்யூன் என்றால் என்ன..?

நம் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலம் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு போதுமான நோயெதிர்ப்பு சக்திகள் இல்லாததால் அடிக்கடி உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றன. குழந்தையில் இருந்து நாம் பருவ வயதை அடையும்போது நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடைந்து, நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும் கவசத்தை உருவாக்கிறது. அந்தவகையில், ஆட்டோ இம்யூன் நோய்கள் என்பது நம் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் அல்லது அதன் செயல்திறனை குறைத்து நம் உடலை மற்ற நோய்களுக்கு ஆளாக்கும் நோயாகும்.

இதுகுறித்து இந்த ஆய்வின் இணை ஆசிரியரான டாக்டர் ஆலாப் கிறிஸ்டி தெரிவிக்கையில், “ சில சந்தர்ப்பங்களில், இந்த ஆட்டோ இம்யூனால் நோயெதிர்ப்பு செயல்பாடு உடலில் இருக்கும் திசுக்களை தவறாக தாக்குகிறது. இதன் காரணமாக, உடலில் காரணமே இல்லாமல் வீக்கங்கள் ஏற்படுகின்றன. தொற்றுநோயை தொடர்ந்து ஆட்டோ இம்யூன் நிலைமைகளும் அதிகரிப்பதை மருத்துவர்கள் அதிகளவில் கண்டறிந்துள்ளன. இது குறிப்பாக பெண்கள் மற்றும் வயதான பெரியவர்களுக்கு அதிக ஆபத்தை தருகிறது” என்று குறிப்பிட்டார்.

மாரடைப்பு – பக்கவாதம்:

கடந்த வாரம் அமெரிக்க விஞ்ஞானிகளால் ஒரு ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. அதில், கொரோனா முதல் அலையின் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் பேர் மீது ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த நபர்களை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கண்காணிக்கப்பட்டதில், கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் அல்லது இறப்பு இருமடங்கு ஏற்பட்டதை கண்டறிந்தனர். இந்த ஆபத்து நான்கு மடங்கு வரை அதிகரிக்கும் என்றும் தெரிவித்திருந்தனர்.

கொரோனாவிற்கும் இதயத்திற்கும் என்ன சம்பந்தம்..?

கொரோனா வைரஸ் இதயத்தை பல வழிகளில் பாதிக்க செய்யும். இந்த வைரஸ் இடத்த உறைவுன் செயல்முறையை பாதிக்கும் என்றும், மயோட்கார்டிடிஸ் அதாவது இதயத்தின் வீக்கத்தை உண்டாக்கி மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும்.

ALSO READ: Watch Video: காற்றில் பறந்து கேட்ச்.. சூப்பர்மேனாக மாறிய ஆயுஷ் பதோனி.. வைரலாகும் வீடியோ!

பாதுகாப்பாக இருக்க என்ன செய்யலாம்..?

பெரும்பாலான கொரோனா தொற்றுநோய்கள் லேசானவை. இவை, நீண்ட கால பிரச்சனைகளை ஏற்படுத்தாது. இருப்பினும், இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும். தினமும் சிறிதுநேரம் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், துரித உணவுகளை தவிர்த்தல் உள்ளிட்ட விஷயங்களை மேற்கொள்வது நல்லது. முடிந்தவரை காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட ஆரோக்கியமானவற்றை தினசரி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

மாஸ்டர் பட நடிகை தான் இந்த பாப்பா...
மனிதர்களை தாக்கக்கூடிய பறவைகள் என்னென்ன தெரியுமா?
வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்..?