5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Benefits of Sprouts: முளைக்கட்டிய தானியங்களால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

Health Tips : பலரும் தங்கள் உடம்பினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அதன் காரணமாக ஆரோக்கியமான உணவுகளை தேடி தேடி உண்ணுகிறார்கள். அந்த வகையில் முளைக்கட்டிய பயிரில் ஏராளமான நன்மைகள் குவிந்திருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தியாவசியமாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு இந்த முளைக்கட்டிய பயிர்

Benefits of Sprouts: முளைக்கட்டிய தானியங்களால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
Sprouts (Photo Credit:NoDerog/E+/Getty Images)
Follow Us
mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 11 Sep 2024 22:13 PM

முளைகட்டிய பயிரின் நன்மைகள்: முளைகட்டிய பயிர்களால் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. இதனை உடற்பயிற்சி செய்பவர்கள் மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். ஆனால் அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்த யாரும் அதை எடுக்காமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு இந்த முளைக்கட்டிய பயிரில் ஏராளமான நன்மைகள் குவிந்திருக்கிறது. இதில் இருக்கக்கூடிய விட்டமின் சி மற்றும் செலினியம் சத்துக்கள் முடி உதிர்வதில் இருந்து பாதுகாக்கிறது. முடிகளின் வேர்கள் வலுவிழந்து உதிர்வதில் இருந்து பாதுகாத்து வேர்களுக்கு ஊட்டம் அளிக்கிறது. அடுத்ததாக இதில் இருக்கக்கூடிய B2 விட்டமின் மற்றும் ஒமேகா 3 எனப்படும் நல்ல  கொழுப்புகளும் சருமங்களை இளமையாகவும் சுருக்கங்கள் இல்லாமலும் வைத்திருக்க உதவுகிறது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள் இந்த முளைக்கட்டிய பயிரை அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம். மேலும் இது ஆஸ்துமா, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு அருமருந்தாக இருக்கிறது. இதில் இருக்கக்கூடிய இரும்புச் சத்து இரத்த சோகை வராமல் தடுக்கிறது. இதில் இருக்கக்கூடிய விட்டமின் ஏ கண்களுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது. விறைப்புத் தன்மை குறைவாக உள்ள ஆண்கள் இதை அடிக்கடி எடுத்து வந்தால் நீடித்த விரைப்புத்தன்மை கிடைக்கும். மேலும் உடல் எடை குறைப்பில் ஈடுபடுபவர்கள் இந்த முளைகட்டிய பயிரை எடுத்து வந்தால் கெட்ட கொழுப்பை கரைப்பதற்கு இது உதவுகிறது. இதிலுள்ள பொட்டாசியம் ரத்தம் சீராக ஓட உதவுகிறது.

Also Read: Coriander Water Benefits: வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீர் குடிங்க.. இதுவே பல பிரச்சனைகளுக்கு மருந்தாகும்!

சாப்பிடும் முறைகள்:

இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. தினமும் எடுத்துக் கொள்ளாமல் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே எடுக்க கொள்ள வேண்டும். இந்த முளைகட்டிய பயிரை வேகவைத்து சாப்பிட்டால் அதனின் பலன்கள் குறைவதால் அதை அப்படியே சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் முளைக்கட்டும்போது அதில் இருக்கக்கூடிய சத்துக்கள் இரட்டிப்பாகிறது. ஒரு கப் அளவு முளைகட்டிய பயிரை எடுப்பதின் மூலமாக நம் உடம்பில் இருக்கக்கூடிய நல்ல கொழுப்பு 12 சதவீதம் வரை உயர்வதற்கு உதவுகிறது. கடைகளில் இதை வாங்கும் பொழுது மிகவும் கவனமுடன் வாங்க வேண்டும்.

குளிர்சாதன பெட்டியில் இல்லாமல் வெளியில் வைத்திருந்தாலோ அல்லது அந்த முளைக்கட்டிய பயிரிலிருந்து அதிக அளவில் துர்நாற்றம் வந்தாலோ அதை வாங்க வேண்டாம். இதை சாலட் செய்து சாப்பிடலாம். மேலும் சூப், சாண்ட்விச் போன்ற உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம். முளைகட்டிய பயிரை அரைத்து தோசை மாவில் கலந்து வேக வைத்து சாப்பிடலாம். முளைக்கட்டிய பயிர்கள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே முளைக்கட்டிய பயிரை சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக உடலுக்கு வேலை கொடுக்க வேண்டும். வயதானவர்கள் அதிகளவில் முளைகட்டிய பயிரை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

எந்தெந்த பயிரில் என்னென்ன நன்மைகள்?

முளைவிட்ட கோதுமையை சாப்பிட்டால் புற்றுநோய் தாக்கத்தை குறைக்கும். முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியாக இருப்பவர்களுக்கு உடல் எடை கூடும். முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள், கடின வேலையில் ஈடுபடுபவர்கள் எடுத்துக் கொள்ளலாம். முளைவிட்ட பச்சைப்பயிறு‌ சாப்பிட்டால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் எடை குறைந்து, மூட்டு வலி நீங்கும். முளைவிட்ட கருப்பு உளுந்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். முளைக்கட்டிய கம்பு சாப்பிட்டால், உடலில் ஊட்டச்சத்து அதிகரிக்கும். முளைவிட்ட வெந்தயத்தை சாப்பிட்டால் சர்க்கரை அளவை குறைப்பதோடு வயிற்றுப்புண், பெண்களின் கர்ப்பப்பை தொடர்பான நோய்களை குறைக்கிறது.

வீட்டிலேயே முளை கட்டலாம்:

பச்சைப் பயிர், பச்சை பட்டாணி, சோயா பீன்ஸ், தர்பூசணி விதை, வெந்தயம், கோதுமை, கொண்டைக்கடலை, நிலக்கடலை, ராகி போன்ற எல்லா வகை தானியங்களிலும் நாம் வீட்டிலேயே முளை கட்டிக் கொள்ளலாம். ஏதேனும் ஒரு வகை பயிரை இரண்டு கை அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை தண்ணீரில் இரண்டு முறை நன்றாக கழுவ வேண்டும். பின்பு மூன்றாவது முறையாக தண்ணீரை ஊற்றி குறைந்தது 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு தண்ணீரை வடிவத்து விட்டு ஊற வைத்த பயிரை ஒரு துணியில் இறுக்கி கட்டி தொங்க விட வேண்டும். பின் 24 மணி நேரம் கழித்து அவிழ்த்து பார்த்தால் பயிர்கள் முளைவிட்டு இருக்கும். நன்றாக முளை கட்ட வேண்டுமானால் ஏழு நாட்கள் வரை கூட இதை தொங்கவிடலாம்.

Also Read: Health Advice: உங்கள் உடலுறவு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? இந்த விஷயங்களில் கவனம் தேவை..!

 

Latest News