Drumstick Leaves: முருங்கைக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.. இவ்வளவு சத்துகள் இருக்கா?
அன்றாட வாழ்வில் தினசரி முருங்கக்கீரை உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு நிவாரணியாகவும், ஏழைகளின் வரப்பிரசாதமாக அமைந்த முருங்கைக்கீரை பயன்பாடு குறித்து காணலாம்.
முருங்கைக்கீரை இலை நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வளர்ந்து வரும் பரிமாண வளர்ச்சிக்கு ஏற்ப நமது மக்களின் உணவு முறைகளும் மாறிவரும் சூழலில் முருங்கைக்கீரையின் பயன்பாடு குறைந்துவிட்டது என்று எண்ணினால் அது தவறு. கிராமங்களைக் காட்டிலும் நகர்ப்புறங்களில் அதிக அளவில் மக்கள் முருங்கைக்கீரை இணை பயன்படுத்துவதை அதிகரித்து வருகின்றனர். சென்னையில் ஒரு கட்டு முருங்கைக் கீரையின் விலை 20 முதல் 30 ரூபாய் வரை இருக்கிறது. பல்வேறு நோய்களுக்கு நிவாரணையாக விளங்கும் முருங்கைக் கீரை நமது மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர்.
முருங்கைக்கீரைகள் வைட்டமின் ஏ,பி, சி, சுண்ணாம்பு புரதம் தாமிரம் இரும்பு கால்சியம் தாந்தகம் குளோரின் மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றை அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்வதன் மூலம் மன ஆரோக்கியம் மற்றும் ஞாபக சக்தி அதிகரிப்பு, எலும்பு வலுப்பெறுதல், முடி வளர்ச்சி, இதய ஆரோக்கியம், கண்பார்வை, மலச்சிக்கல், ஆஸ்துமா, மார்புச் சளி போன்ற பல்வேறு நோய்களுக்கு மருந்தாக அமைகிறது.
Also Read: Cocunut Oil: அன்றாடம் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்…!
முருங்கைக் கீரையை சாம்பார் சூப் பொரியல் முருங்கைக்கீரை சாதம் முருங்கை கீரை அடை தோசை முருங்கைக்கீரை வடை போன்ற பல்வேறு விதமாக நாம் அன்றாட உணவில் எடுத்துக் எடுத்துக் கொள்ளலாம். கிராமங்களில் மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய முருங்கைக் கீரையை தினமும் பயன்படுத்தி வருகின்றனர். முருங்கைக் கீரையின் இலையை பொடி செய்து சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. முருங்கைக்கீரை சரும ஆரோக்கியத்திற்கும் உடலில் உள்ள தொற்றுகள் பாக்டீரியாவால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாத்து நன்மை செய்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு முருங்கை கீரை சிறந்த உணவாக உள்ளது எது இரத்தின சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
Also Read: Asritha: சீரியல் நடிகைக்கு இப்படி ஒரு நோயா..? நினைவுகளை இழந்து பாதிக்கப்பட்டேன் ..!
சிறுநீர் பாதையில் ஏற்படும் பிரச்சனைகளையும் போக்கி பல்வேறு ஆரோக்கியங்களை உடலுக்கு அளிக்கிறது. தினசரி உணவில் முறுங்கக் கீரையை சேர்க்க முடியவில்லை என்றாலும், வாரத்தில் இரண்டு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது பயனளிக்கும்.
முருங்கைக் கீரையை நீரிழிவு நோய்க்காக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள் தவிர்ப்பது சிறந்தது. மேலும் வயிற்றுப் பிரச்சனைகள் உள்ளவர்கள் முருங்கைக்கீரையினை தவிர்ப்பதும், அதே நேரத்தில் சில நோய்களுக்கு மருந்து மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் முருங்கைக்கீரையினை பயன்படுத்துவதும் நன்மை பயக்கும்