Breast Milk Increase: இயற்கையாக தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பது எப்படி? - Tamil News | how to increase breast milk naturally at home in tamil | TV9 Tamil

Breast Milk Increase: இயற்கையாக தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பது எப்படி?

Published: 

27 Jul 2024 15:34 PM

இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இதன் காரணமாக குழந்தைகளுக்கு மாட்டுப்பால் அல்லது பால் பவுடர் உணவாக கொடுக்க வேண்டிய நிலை உருவாகிறது. இதனால், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. இருப்பினும், பாரம்பரியமாக நாம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களுக்கு தாய்ப்பாலை அதிகரிக்கும் தன்மை உள்ளது. இது, தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதோடு, தாய் சேய் இருவருக்கும் நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. தற்போது, அந்த பாரம்பரிய பொருட்கள் என்னென்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.

Breast Milk Increase: இயற்கையாக தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பது எப்படி?

மாதிரி புகைப்படம்

Follow Us On

பச்சிளம் குழந்தைகளுக்கு முதல் ஆறுமாதம் வரை தாய்ப்பால் மட்டுமே ஆரோக்கியமான உணவு ஆகும். ஆனால், தற்போது பெரும்பாலான பெண்கள் தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இதன் காரணமாக குழந்தைகளுக்கு மாட்டுப்பால் அல்லது பால் பவுடர் உணவாக கொடுக்க வேண்டிய நிலை உருவாகிறது. இதனால், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க, தாய்மார்கள் சத்தான உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இருப்பினும், பாரம்பரியமாக நாம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களுக்கு தாய்ப்பாலை அதிகரிக்கும் தன்மை உள்ளது. இது, தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதோடு, தாய் சேய் இருவருக்கும் நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. தற்போது, அந்த பாரம்பரிய பொருட்கள் என்னென்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.

Also Read: Relationship Tips: தவறுதலாக கூட இந்த ரகசியங்களை சொல்லாதீர்கள்.. இது வாழ்க்கையை கெடுத்துவிடும்!

குறிப்பு: தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்வதற்கு முன்பு, உங்க மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

வெந்தயம்:

தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதில் சக்தி வாய்ந்த பொருளாக வெந்தயம் உள்ளது. பாலூட்டும் தாய்மார்களுக்கு நல்லதும் கூட. வெந்தயத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிப்பது மட்டுமல்லாமல், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. 

எப்படி சேர்த்துக் கொள்வது?

ஒரு கிளாஸ் தண்ணீரில் 2 ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைக்கவும். பிறகு, மறுநாள் காலை அந்த தண்ணீரை வடிக்கட்டி குடித்துவரலாம். வெந்தயத்தை உணவு தாளிப்பின் போது சேர்க்கலாம். 

பெருஞ்சீரகம்:

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் மற்றொரு பாரம்பரிய பொருள் பெருஞ்சீரகம். இது வாய்வு, அஜீரணம், வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரக்கூடியது. பெருஞ்சீரகத்தை பாலூட்டும் தாய்மார்கள் சேர்த்துக்கொள்வதன் மூலம் தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும். இதன் ஆரோக்கிய நன்மைகளை தாய்ப்பால் மூலமாக குழந்தைகளும் பெறுவார்கள்.

Also Read: Heart Attack: மாரடைப்பு வந்துவிடும் என்று பயமா..? தினமும் இதை செய்தாலே போதும்! ஹார்ட் அட்டாக் வராது..

எப்படி சேர்த்துக் கொள்வது?

பெருஞ்சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் சிறிதளவு தேன் சேர்த்து டீ மாதிரி குடிக்கலாம்.

எள்ளு:

பாலூட்டும் தாய்மார்களுக்கு கால்சியம் சத்து முக்கியமான ஒரு ஊட்டச்சத்தாகும். தாய் சேய் இருவரின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமான கால்சியம் சத்தானது எள்ளில் எக்கச்சக்கமாக இருக்கிறது. எனவே, எள்ளை தொடர்ந்து சேர்த்துக் கொண்டு வந்தால் பால் சுரப்பு இயற்கையாகவே அதிகரிக்கும். 

 எப்படி சேர்த்துக் கொள்வது?

கருப்பு எள், துருவிய தேங்காய், பேரீச்சம் பழம் மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து இடித்து அல்லது அரைத்து லட்டு செய்து சாப்பிடலாம். எள்ளுக்கு உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் தன்மை இருப்பதால், ஒரு நாளைக்கு 1 உருண்டை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்.

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version